வேஷ்டி அணிந்து வர வேண்டாம்

Updated : ஏப் 02, 2023 | Added : ஏப் 02, 2023 | கருத்துகள் (26) | |
Advertisement
ராகுலின் எம்.பி., பதவி பறிபோனதை அடுத்து, சமீபத்தில் காங்கிரஸ், பார்லிமென்ட் வளாகத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகை வரை கண்டன ஊர்வலம் நடத்தியது.இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற தென் மாநில எம்.பி.,க்களுக்கு, காங்., பொதுச் செயலர் வேணுகோபால் ஒரு உத்தரவிட்டாராம்.'தயவு செய்து ஊர்வலத்தில் யாரும் வேஷ்டியில் வர வேண்டாம்; அனைவரும் குர்தா, பைஜாமா அல்லது பேன்ட் அணிந்து வர வேண்டும்'
come with byjamaவேஷ்டி அணிந்து வர வேண்டாம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ராகுலின் எம்.பி., பதவி பறிபோனதை அடுத்து, சமீபத்தில் காங்கிரஸ், பார்லிமென்ட் வளாகத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகை வரை கண்டன ஊர்வலம் நடத்தியது.

இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற தென் மாநில எம்.பி.,க்களுக்கு, காங்., பொதுச் செயலர் வேணுகோபால் ஒரு உத்தரவிட்டாராம்.

'தயவு செய்து ஊர்வலத்தில் யாரும் வேஷ்டியில் வர வேண்டாம்; அனைவரும் குர்தா, பைஜாமா அல்லது பேன்ட் அணிந்து வர வேண்டும்' என்றாராம்.


latest tamil news


இப்படி திடீரென வேஷ்டியில் வர வேண்டாம் என சொல்லப்பட்ட நிலையில், திண்டாடிய சில தென் மாநில எம்.பி.,க்கள், தங்களிடம் இருந்த பழைய பேன்ட்களை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனராம்.

கடந்த முறை இப்படி ஒரு கண்டன ஊர்வலம் நடக்கையில், புதுடில்லி போலீசார், எம்.பி.,க்களை பிடித்து இழுத்த போது வேஷ்டி கையோடு வந்துவிட்டது. இதை சில புகைப்படக்காரர்கள் படம் எடுத்து, வேஷ்டியில் இல்லாத இந்த எம்.பி.,க்களின் படங்கள் பத்திரிகைகளில் வெளியிடவே, அவர்களுக்கு அவமானமாகி விட்டது.

எனவே, 'எம்.பி.,க்களுக்கு மீண்டும் இப்படியொரு இக்கட்டான நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, அவர்களை பேன்ட் அல்லது குர்தா அணிய சொன்னேன்' என்றாராம் வேணுகோபால்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (26)

MARUTHU PANDIAR - chennai,இந்தியா
04-ஏப்-202319:24:21 IST Report Abuse
MARUTHU PANDIAR தமிழகம் பெரியார் மண் ஆக இருக்கலாம்++++ஆனால் ஈவேராவுக்கு பிடித்தது வெள்ளைக்காரன், அவனது ஆட்சி, மொழி மற்றும் கலாச்சாரம்+++பின்ன வேட்டி எப்படி செல்லு படியாகும்? தெரிய வேண்டாமா?
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
02-ஏப்-202322:45:25 IST Report Abuse
venugopal s பரவாயில்லையே,பாஜகவினர் போல் இல்லாமல் காங்கிரஸ் கட்சியினருக்கு வெட்கம் ,மானம் எல்லாம் இருக்கிறதே!
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai, Thamizhagam.,இந்தியா
02-ஏப்-202320:58:05 IST Report Abuse
Vijay D Ratnam வேஷ்டி தமிழர்களின் அடையாளங்களில் ஒன்று. இலங்கையில் நம் தொப்புள்கொடி உறவுகளான ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்த இலங்கைக்கு உதவிய திமுக கூட்டணியுடன் இருந்த காங்கிரசிடம் தமிழனின் அடையாளத்தை தேட முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X