அதிமுகவை யார் சீண்டினாலும் அவர்கள் தான் அழிந்து போவார்கள்: பொங்கினார் பழனிசாமி

Updated : ஏப் 02, 2023 | Added : ஏப் 02, 2023 | கருத்துகள் (20) | |
Advertisement
விழுப்புரம்: அதிமுகவை யார் சீண்டினாலும் அவர்கள் தான் அழிந்து போவார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறினார். விழுப்புரத்தில் தொண்டர்கள் மத்தியில் பழனிசாமி பேசியதாவது: அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. நான் தொண்டர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்படுவேன். அதிமுக மீண்டும் ஆட்சியில் அமரும். அதிமுகவுக்கு விரைவில் விடிவு காலம் பிறக்கும்.
Will work to restore AIADMK rule: Palaniswami assured  அதிமுகவை யார் சீண்டினாலும் அவர்கள் தான் அழிந்து போவார்கள்: பொங்கினார் பழனிசாமி

விழுப்புரம்: அதிமுகவை யார் சீண்டினாலும் அவர்கள் தான் அழிந்து போவார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறினார்.



விழுப்புரத்தில் தொண்டர்கள் மத்தியில் பழனிசாமி பேசியதாவது:

அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. நான் தொண்டர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்படுவேன். அதிமுக மீண்டும் ஆட்சியில் அமரும். அதிமுகவுக்கு விரைவில் விடிவு காலம் பிறக்கும்.


ஒளிமயமான எதிர்காலம் நம் கண்ணுக்கு முன்னால் தெரிகிறது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவோம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக மக்கள் பணியில் தொடர்ந்து எப்போதும் இருக்கும். அதிமுகவை யார் சீண்டினாலும் அவர்கள் தான் அழிந்து போவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.



முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கை:

அதிமுக மக்களுக்காகவே இயங்கும் என்ற ஜெயலலிதாவின் சபதத்தை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது. ஜனநாயக மாண்புகளை காத்து நிற்கும் அதிமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்பது மகிழ்ச்சி. எனது உழைப்பை, நேர்மையை அங்கீகரித்து வழங்கப்பட்ட பொறுப்பு மக்களாட்சித் தத்துவத்திற்கான அங்கீகாரம்.



latest tamil news

அதிமுக வெற்றிப்பயணம் தொடர, தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்ற தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. கட்சியை சிறப்பாக வழி நடத்தி மீண்டும் அதிமுக ஆட்சியை மலரச் செய்ய அயராது பணியாற்றுவேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
02-ஏப்-202322:01:52 IST Report Abuse
Ramesh Sargam அதிமுகவை அழிக்க நீங்கள் இரண்டு பேர் - பழனிசாமி & பன்னீர்செல்வம் - போதுமே. வேறு ஒருவர் எதற்கு?
Rate this:
Cancel
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
02-ஏப்-202320:12:52 IST Report Abuse
தாமரை மலர்கிறது ரெட்டை இலையின் மீது தாமரை மலரும்.
Rate this:
Cancel
பைரவர் சம்பத் குமார் 1). எடப்பாடி ராகுல் காந்தியின் அண்ணன்.2). கட்சியில் இருந்த முக்கிய தென் தமிழக தலைவர்களை துரத்தி 10 சதவீத வாக்கு சதவீதத்தை தொலைத்தவர்.3). அகம்பாவம் இருமாம்பின் அடுத்த உருவம்.4).இதுவரை கூட்டணிக்கு தலைமை ஏற்று ஒரு தேர்தலிலும் ஜெயித்தது இல்லை. ஆனால் பேசுவது பெரிய சாதனையாளர் என்று.5). தான் எம்ஜிஆர் ஜெயலலிதா என்ற நினைப்பு வேறு.6). கூடட்ணி கட்சிகளை அரவணைத்து செல்லும் திறமை இல்லாதவர்.7). கொங்கு மற்றும் தென் தமிழகம் அண்ணாமலை அவர்களேக்கே இந்த முறை ஒட்டளிக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X