அவதூறு வழக்கு: ராகுல் நாளை மேல்முறையீடு ?

Updated : ஏப் 02, 2023 | Added : ஏப் 02, 2023 | கருத்துகள் (13) | |
Advertisement
புதுடில்லி: அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் நாளை(ஏப்.,3) மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.'மோடி' எனும் ஜாதியினரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
Rahul To Challenge Conviction In Defamation Case Tomorrow: Sourcesஅவதூறு வழக்கு: ராகுல் நாளை மேல்முறையீடு ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் நாளை(ஏப்.,3) மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


'மோடி' எனும் ஜாதியினரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் உடனடியாக ஜாமின் வழங்கியதுடன், மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தீர்ப்பை நிறுத்தி வைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு அடுத்த நாள் ராகுல், தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.


தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் சட்ட வல்லுநர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தனர்.



latest tamil news


இந்நிலையில், சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ராகுல், நாளை செசன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மனுவில், நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை அந்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளதாக தெரிகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

sridhar - Chennai,இந்தியா
02-ஏப்-202322:51:37 IST Report Abuse
sridhar என்ன இவ்வளவு வேகமாக செயல்படுகிறார் . சொந்த விஷயத்திலேயே இவ்வளவு மெத்தனமாக இருப்பவர் எதற்கும் லாயக்கில்லை .
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
02-ஏப்-202321:20:51 IST Report Abuse
Viswam கோர்ட்டுக்கு போனோமா மன்னிப்பு கேட்டோமா வெளியே வந்தோமா பாஜகவுக்கு பிரச்சாரம் செய்ய கர்நாடகாவுக்கு போனோமான்னு இருக்கணும். அப்புறம் வேணும்னா டெமாக்ரசியை நிலைநிறுத்திய நீதிபதிக்கு தலை வணங்குகிறேன், பாராளுமன்றத்தில் பேசவிடாமல் தடுக்கும் டெமாக்ரசியை வேரறுக்கவேண்டும் அப்படின்னு புருடா விடலாம். இதுல முக்கியம் என்னவென்றால் இவரு மன்னிப்பு கேட்பாரு ஆனா சாவர்க்கர் கிடையாது
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
02-ஏப்-202320:16:07 IST Report Abuse
DVRR விளம்பரம் விளம்பரம் "நாளை மேல்முறையீடு , இன்று காலை 11.00 மணிக்கு மேல் முறையீடு, நேற்று மாலை 5 மணிக்கு மேல் முறையீடு ???10 நாள் கழித்து ??கோர்ட்டு மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டது???மூன்று மாதம் கழித்து மேல் முறையீடு இன்று எடுத்துக்கொள்ளப்படும் ......................................இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X