அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வலுவாக உள்ளது: எல்.முருகன்

Updated : ஏப் 02, 2023 | Added : ஏப் 02, 2023 | கருத்துகள் (9) | |
Advertisement
சென்னை : அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. வலுவாக உள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார்.சென்னையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: நிர்வாகிகள் கூட்டத்தில் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியதில் எந்த சர்ச்சையும் இல்லை. அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. வலுவாக உள்ளது. கூட்டணி குறித்த கேள்வியை தி.மு.க.,விடம் தான் கேட்க
ADMK-BJP alliance is strong: L. Murugan  அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வலுவாக உள்ளது: எல்.முருகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. வலுவாக உள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார்.


சென்னையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: நிர்வாகிகள் கூட்டத்தில் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியதில் எந்த சர்ச்சையும் இல்லை. அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. வலுவாக உள்ளது. கூட்டணி குறித்த கேள்வியை தி.மு.க.,விடம் தான் கேட்க வேண்டும். அக்கூட்டணியில் தான் சலசலப்புகள் உள்ளது.


தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சியடைகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் கட்சி தலைவர்களாக இருந்தவர்கள் தங்களது பங்களிப்பை அளித்து கட்சியை சிறப்பாக நடத்தினர்.


latest tamil news

இந்திய அளவில் 150 தொகுதிகளை கட்சி மேலிடம் அடையாளம் கண்டுள்ளது. அங்கு வெற்றி பெற அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இதில், தமிழகத்தில் 9 தொகுதிகள் உள்ளன. கட்சியின் மேலிடத்தின் வழிகாட்டுதலின்படி எங்களது பணி தொடரும். இவ்வாறு முருகன் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
02-ஏப்-202322:40:45 IST Report Abuse
venugopal s அதிமுக பாஜக கூட்டணி வேறு வழியில்லாமல் இருக்கிறது என்றால் ஒத்துக் கொள்ளலாம், ஆனால் வலுவாக இருக்கிறது என்பதை தான் ஒத்துக் கொள்ள முடியவில்லை!
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
02-ஏப்-202320:37:40 IST Report Abuse
r ravichandran தனிப்பட்ட மனிதர்களின் தவறான விருப்பதினால் கட்சி தவறான பாதையில் செல்லக்கூடாது. கட்சியின் கொள்கைகள் கோமாளித்தனம் மிகுந்து இருந்தாலும் சீமான் தனித்து நின்று தேர்தலுக்கு தேர்தல் வாக்கு வங்கியை உயர்தி வருகிறார். அண்ணாமலை மற்ற தலைவர்களை விட கட்சியை வேகமாக வளர்த்து கொண்டு வந்தார். இனிமேல் அதிமுக கூட்டணி என்றால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அண்ணாமலை வழியே சிறந்த வழி, தனித்து நின்று தோல்வி அடைந்தாலும் வாக்கு வங்கியை அதிகரிக்க முடியும்.
Rate this:
T R Raja Raja - chennai,இந்தியா
02-ஏப்-202322:54:00 IST Report Abuse
T R Raja Rajaவழிமொழிகிறோம்... Read more at: s://www.dinamalar.com/news_detail.asp?id=3282949 Read more at: s://www.dinamalar.com/news_detail.asp?id=3282949...
Rate this:
Cancel
02-ஏப்-202319:47:49 IST Report Abuse
ராஜா நாங்க எல்லாம் அண்ணாமலைய வெச்சி பாத்துக்கறோம். நீங்க டெல்லில வேற வேலைய பாருங்க சார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X