வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் வன்முறையை தூண்டிவிட்டு பா.ஜ., ஆதாயத்தை தேடுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.
கடந்த வாரம் ராம நவமி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டங்களின்போது பீஹார், மேற்குவங்கம், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வன்முறை சம்பவம் நடந்தேறியது. பீஹாரின் நலாந்தா, சஸாரம் போன்ற பகுதியில் கலவரம் ஏற்பட்டதில், ஒருவர் கொலை செய்யப்பட்டார். 6 பேர் படுகாயமடைந்தனர். அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராம நவமி பண்டிகையில் ஏற்பட்ட வன்முறைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களிடம் கூறுகையில், 'வலிமை குறைந்ததாக எப்போதெல்லாம் நினைக்கிறதோ அப்போதெல்லாம் பா.ஜ., வன்முறையை தூண்டிவிடுகிறது. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் வன்முறையை தூண்டிவிட்டு பா.ஜ., ஆதாயத்தை தேடுகிறது' இவ்வாறு அவர் கூறினார்.