மதுரை: 'பிளஸ் 2க்கு பின் எதிர்காலம் ஜொலிக்க உயர் கல்வியில் 'என்ன படிக்கலாம்; எங்கே எந்த கல்லுாரியை தேர்வு செய்யலாம்' என உயர்கல்வி படிப்புகள் தொடர்பாக ஏராளமான ஆலோசனைகளை அள்ளி வழங்கும் தினமலர் நாளிதழ், கோவை ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ் இணைந்து நடத்தும் 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி மதுரை தல்லாகுளம் லட்சுமிசுந்தரம் ஹாலில் இன்று (ஏப். 8) துவங்கியது. ஏப்.,10ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது.

தினமும் காலை 10:00, மாலை 4:00 மணி என இரண்டு அமர்வுகளாக பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடக்கின்றன. மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல், கலை உள்ளிட்ட படிப்புகள் குறித்து துறைசார் நிபுணர்கள், கல்வியாளர்கள் பேசுகின்றனர்.
விண்ணப்பம் முதல் சேர்க்கை வரை ஒரே இடத்தில்
இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள், வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவனங்கள் என 90க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் தங்களின் அரங்குகளை அமைத்துள்ளன. இவை காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை இடைவேளையின்றி திறந்திருக்கும்.
ஒவ்வொரு நிறுவனத்திலும் நடத்தப்படும் பாடப்பிரிவுகள், அவற்றிற்கான வேலை வாய்ப்புகள் என விண்ணப்பம் முதல் மாணவர்கள் சேர்க்கை வரை உள்ள நடைமுறைகள், கட்டண விபரம் குறித்து ஆலோசனை பெறலாம். இதன் மூலம் கல்லுாரியை தேர்வு செய்வது குறித்த மாணவர்கள், பெற்றோர் அலைவது தவிர்க்கப்படும். உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகளை பெற www.kalvimalar.com என்ற இணைய தளம் மற்றும் 91505 74441 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் 'ஹாய்' என்ற மெசேஜ் அனுப்பி பதிவு செய்யலாம்.
நிறுவனங்கள்
இந்நிகழ்ச்சியை கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், அமிர்தா விஸ்வ வித்யாலயம், தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் ஆப் இந்தியா (நாலேஜ் பார்ட்டனர்) உடன் கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், கே.எம்.சி.ஹெச் அன்ட் டாக்டர் என்.ஜி.பி., இன்ஸ்டிடியூஷன்ஸ், கோவை எஸ்.என். இன்ஸ்டிடியூஷன்ஸ், என்.பி.ஏ., ஸ்ரீசக்தி இன்ஸ்டிடியூட்ஸ்ஆப் இன்ஜி., அன்ட் டெக்னாலஜி, ஐ.சி.எப்.ஏ.ஐ., உயர்கல்விக்கான அறக்கட்டளை ஆகியன இணைந்து வழங்குகின்றன. அனுமதி இலவசம்.