குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தென் கொரிய அரசு சூப்பர் திட்டம்
குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தென் கொரிய அரசு சூப்பர் திட்டம்

குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தென் கொரிய அரசு சூப்பர் திட்டம்

Added : ஏப் 13, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
சியோல்: கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் பன்மடங்கு குறைந்துள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த பிறப்பு விகிதத்துடன் உள்ள தென் கொரியா பொருளாதாரத்திலும் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது.கடந்த 2022ல் தென் கொரியாவில் ஒரு பெண்ணுக்கு சராசரியாக எதிர்பார்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 0.78 ஆகக் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டு 0.81 ஆக இருந்தது.
South Korean government super plan to increase child birth rate  குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தென் கொரிய அரசு சூப்பர் திட்டம்

சியோல்: கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் பன்மடங்கு குறைந்துள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த பிறப்பு விகிதத்துடன் உள்ள தென் கொரியா பொருளாதாரத்திலும் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது.


கடந்த 2022ல் தென் கொரியாவில் ஒரு பெண்ணுக்கு சராசரியாக எதிர்பார்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 0.78 ஆகக் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டு 0.81 ஆக இருந்தது. இந்நிலையில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு நிதியுதவி உள்ளிட்ட சலுகைகளை தென் கொரிய அரசு அறிவித்துள்ளது.


அதன்படி ஒரு வயது வரையிலான குழந்தைகளுக்கு மாதத்திற்கு 62 ஆயிரம் ரூபாயும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதத்திற்கு 31 ஆயிரம் ரூபாயும் 2024 முதல் வழங்கப்பட உள்ளது. இது 2022ல் முறையே 43 ஆயிரம் ரூபாய் மற்றும் 21 ஆயிரம் ரூபாயாக வழங்கப்பட்டது.


latest tamil news

மேலும் தொடக்கப் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மாதத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கான மருத்துவச் செலவுகள் குழந்தையின்மை சிகிச்சை குழந்தை காப்பகச் சேவைகள் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.


முன்னதாக தென் கொரியாவின் இரண்டாவது பெரிய நகரமான புசானில் உள்ள ஒரு மாவட்ட நிர்வாகம் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் தம்பதிக்கு வழங்கப்படும் தொகையை 31 ஆயிரம் ரூபாயில் இருந்து 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (6)

13-ஏப்-202318:18:32 IST Report Abuse
ஆரூர் ரங் 100 ரோகிங்யா அகதிகளை கொண்டுபோய் குடி வையுங்கள். பார்ப்போம் உங்கள் எதிர்பார்ப்பையே மிஞ்சி விடுவார்கள்.
Rate this:
Cancel
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
13-ஏப்-202314:23:22 IST Report Abuse
Ramaraj P அமைதி மார்க்கத்தை உள்ளே கொண்டு வந்தால் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும்.
Rate this:
INDIAN - madurai,இந்தியா
13-ஏப்-202315:01:18 IST Report Abuse
INDIANஎங்களை சொல்லலைனா உங்களுக்கு சோறு கிடைக்காது......
Rate this:
INDIAN - madurai,இந்தியா
13-ஏப்-202315:03:18 IST Report Abuse
INDIANமற்ற மதத்தை இழிவு படுத்த வேண்டாம்...
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
13-ஏப்-202313:03:00 IST Report Abuse
Ramesh Sargam குழந்தை அதிகம் பிறக்க பேசாம நம்ம பாக்கியராஜ் படம், அதான் அந்த முருங்கைக்காய் படம், அதை அங்குள்ளவர்களுக்கு போட்டுக்காட்டுங்கள். முருங்கைக்காய் வைத்தியம் - செலவு கம்மி. பயன் பல மடங்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X