பா.ஜ., ஆளும் மாநிலங்களில் அரசு வேலைகள் வழங்கும் பணியில் வேகம்: பிரதமர் மோடி பெருமிதம்
பா.ஜ., ஆளும் மாநிலங்களில் அரசு வேலைகள் வழங்கும் பணியில் வேகம்: பிரதமர் மோடி பெருமிதம்

பா.ஜ., ஆளும் மாநிலங்களில் அரசு வேலைகள் வழங்கும் பணியில் வேகம்: பிரதமர் மோடி பெருமிதம்

Updated : ஏப் 13, 2023 | Added : ஏப் 13, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி: பா.ஜ., ஆளும் மாநிலங்களில் அரசு வேலைகள் வழங்கும் பணி வேகமாக நடந்து வருவதாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.லோக்சபா தேர்தலை முன்னிட்டு 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி முன்னெடுத்துள்ளார். 'ரோஜ்கார்' என்று அழைக்கப்படுகிற இந்த திட்டத்தை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி பிரதமர் மோடி துவக்கி
Speed in providing government jobs in BJP-ruled states: PM Modi is proud  பா.ஜ., ஆளும் மாநிலங்களில் அரசு வேலைகள் வழங்கும் பணியில் வேகம்: பிரதமர் மோடி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பா.ஜ., ஆளும் மாநிலங்களில் அரசு வேலைகள் வழங்கும் பணி வேகமாக நடந்து வருவதாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.



லோக்சபா தேர்தலை முன்னிட்டு 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி முன்னெடுத்துள்ளார். 'ரோஜ்கார்' என்று அழைக்கப்படுகிற இந்த திட்டத்தை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது 75 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு வேலைக்கான பணி நியமன உத்தரவுகளை வழங்கினார். இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு முறையும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மத்திய அரசு துறைகளில் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.



latest tamil news

இந்த நிலையில், இன்று (ஏப்.,13) 71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணையை பிரதமர் மோடி வழங்கினார். காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 70,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அரசு வேலை பெற்றுள்ளனர், உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பா.ஜ., ஆளும் மாநிலங்களில் அரசு வேலைகள் வழங்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.



மத்திய பிரதேசத்தில் நேற்று 22,000 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. புதிய இந்தியாவின் இளைஞர்கள் புதுமையான தொழில்நுட்பங்களில் ஈடுபட்டு ட்ரோன் தயாரிப்பில் அதிகளவில் ஈடுபட்டு ட்ரோன் பைலட்களாக மாறுகிறார்கள். உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்வது வேலைவாய்ப்பை ஊக்குவிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (7)

J Karthik - Trichy ,இந்தியா
14-ஏப்-202301:41:44 IST Report Abuse
J Karthik இந்த வேலை வாய்ப்புகள் இதற்கு முன்பு இருந்த ஆட்சியிலும் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் தான் அரசாங்கத்தில் ஒவ்வொரு வருடம் எத்தனையோ பேர் ஓய்வு பெறுகின்றனர் அதற்கு ஈடாக பணியாளர் தேர்வாணையம் பணியாளர்களை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக இந்த வேலை வாய்ப்புகளை கொடுத்து வருகிறது இதற்கு முன்பு இருந்த காங்கிரஸ் ஆட்சியிலும் இதே போன்ற பணியாளர்களை தேர்வு செய்தனர்
Rate this:
Cancel
hari -  ( Posted via: Dinamalar Android App )
13-ஏப்-202318:25:28 IST Report Abuse
hari எல்லாமே முரசொலி ரசிகர்கள் போல இருக்கே மத்த பேப்பர் எல்லாம் படிங்கப்பா..... நெட் பாருங்க....கவர்மெண்ட் ஜாப் வெப்சைட் பாருங்க.... குண்டு சட்டியலையே எவளோ நாள் இருப்பிங்க
Rate this:
Cancel
13-ஏப்-202315:37:25 IST Report Abuse
அப்புசாமி ரொம்ப நல்லது. அப்படியே தமிழ் தெரியாதவரை இங்கே பேங்க், ரயில்வே ஸ்டேஷன்களில் வேலைக்கு அனுப்பி எங்க கழுத்தை அறுக்காதீங்க. அங்கேயே வேலை குடுத்துருங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X