125 அடி உயர அம்பேத்கர் சிலை சந்திரசேகர ராவ் திறந்தார்
125 அடி உயர அம்பேத்கர் சிலை சந்திரசேகர ராவ் திறந்தார்

125 அடி உயர அம்பேத்கர் சிலை சந்திரசேகர ராவ் திறந்தார்

Updated : ஏப் 15, 2023 | Added : ஏப் 15, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
ஹைதராபாத்-தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் நிறுவப்பட்டுள்ள, 125 அடி உயர அம்பேத்கர் சிலையை, அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார். ஹைதராபாதில், ஹுசைன் சாகர் ஏரிக்கரையோரம், 50 அடி உயர பீடத்தில், 125 அடி உயர அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டு உள்ளது. 11.4 ஏக்கரில், 146 கோடி ரூபாய் செலவில், 360 டன் ஸ்டீல், 114 டன் வெண்கலத்துடன் இந்த சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அம்பேத்கர் சிலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஹைதராபாத்-தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் நிறுவப்பட்டுள்ள, 125 அடி உயர அம்பேத்கர் சிலையை, அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார்.



latest tamil news


ஹைதராபாதில், ஹுசைன் சாகர் ஏரிக்கரையோரம், 50 அடி உயர பீடத்தில், 125 அடி உயர அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டு உள்ளது. 11.4 ஏக்கரில், 146 கோடி ரூபாய் செலவில், 360 டன் ஸ்டீல், 114 டன் வெண்கலத்துடன் இந்த சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டுள்ள பீடம், பார்லி., கட்டடம் போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நேற்று, அம்பேத்கரின் 132வது பிறந்த நாளை ஒட்டி, இந்த 125 அடி உயர அம்பேத்கர் சிலையை, பாரத் ராஷ்ட்ரீய சமிதி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார்.


latest tamil news


அப்போது ஹெலிகாப்டர் வாயிலாக சிலை மீது மலர்கள் துாவப்பட்டன.

இந்த சிலை, நம் நாட்டில் உள்ள அம்பேத்கர் சிலைகளில், மிக உயரமான சிலை என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபபாய் பட்டேலின், 597 அடி உயர சிலையை வடிவமைத்த சிற்பிகளான ராம் மனோஜ் சுடார், அவருடைய மகன் அணில் ராம் சுடார் ஆகியோர் அம்பேத்கர் சிலையை வடிவமைத்து உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (3)

Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
15-ஏப்-202309:19:03 IST Report Abuse
Kasimani Baskaran இந்தியாவின் மாபெரும் பொருளாதார மேதையை, அரசியலமைப்பு சட்டத்தின் சிற்பியை மறக்கவில்லை...
Rate this:
Cancel
ramanujam - chennai,இந்தியா
15-ஏப்-202302:40:16 IST Report Abuse
ramanujam Nattirku தேவை இல்லை என்று நினைகிறேன்
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
15-ஏப்-202309:56:00 IST Report Abuse
vadiveluநாடு வளமாக இருக்கிறது, நாட்டின் பொருளாதாரம் மிக மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது.மாநிலங்களும் பொருளாதாரத்தில் உயர்ந்து இருக்கின்றன , வரவேற்க வேண்டிய நிலைமை. வருமானம் அதிகமாக இருப்பதால்தான் இப்படி சில நூறு கோடிகளுக்கு சிலைகளை கூட அரசே நிர்மாணிக்க முடிகிறது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X