புதுடில்லி மதுபான கொள்கை வழக்கு; முதல்வர் கெஜ்ரிவால் இன்று ஆஜர்
புதுடில்லி மதுபான கொள்கை வழக்கு; முதல்வர் கெஜ்ரிவால் இன்று ஆஜர்

புதுடில்லி மதுபான கொள்கை வழக்கு; முதல்வர் கெஜ்ரிவால் இன்று ஆஜர்

Updated : ஏப் 16, 2023 | Added : ஏப் 16, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி மதுபானக் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி தலைவரும் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் சி.பி.ஐ., முன் இன்று நேரில் ஆஜராக உள்ளார்.புதுடில்லியில் அமல்படுத்தப்பட்டு பின் விலக்கிக் கொள்ளப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக பா.ஜ., குற்றம் சாட்டியது. இது குறித்து துணை நிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா அளித்த பரிந்துரைப்படி வழக்குப் பதிவு
New Delhi Liquor Policy Case Chief Minister Kejriwal appeared today   புதுடில்லி மதுபான கொள்கை வழக்கு; முதல்வர் கெஜ்ரிவால் இன்று ஆஜர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


புதுடில்லி மதுபானக் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி தலைவரும் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் சி.பி.ஐ., முன் இன்று நேரில் ஆஜராக உள்ளார்.

புதுடில்லியில் அமல்படுத்தப்பட்டு பின் விலக்கிக் கொள்ளப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக பா.ஜ., குற்றம் சாட்டியது. இது குறித்து துணை நிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா அளித்த பரிந்துரைப்படி வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ., அதிகாரிகள் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணைக்காக புதுடில்லியில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்தில் இன்று காலை 11:00 மணிக்கு ஆஜராகும்படி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று முன்தினம் சம்மன் அனுப்பினர். இதன்படி இன்று சி.பி.ஐ., அலுவலகத்தில் அவர் ஆஜராக உள்ளார்.


இது குறித்து நேற்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:


latest tamil news


விசாரணைக்காக நிச்சயம், சி.பி.ஐ., அதிகாரிகள் முன் ஆஜராவேன்; அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

அரவிந்த் கெஜ்ரிவால் என்பவர் ஊழல்வாதி என்பது நிரூபணமானால் இந்த உலகிலேயே நேர்மையானவர்கள் என எவரும் இருந்து விட முடியாது. என்னை கைது செய்யும்படி பா.ஜ., உத்தரவிட்டால் அதை நிறைவேற்ற சி.பி.ஐ., அதிகாரிகள் நிச்சயம் அதைச் செய்வர்.

இந்த வழக்கில் போலியான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. அதற்காக, சி.பி.ஐ.,க்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்.

ஊழலுக்கு எதிராக, சட்டசபையில் என்றைக்கு நான் பேசினேனோ அன்றைக்கே நான் குறிவைக்கப்பட்டு விட்டேன். எந்த ஆதாரமும் இல்லாமல் பிரதமர் மோடிக்கு, 1,000 கோடி ரூபாய் தந்தேன் என நான் கூறினால் பிரதமரை கைது செய்வீர்களா

இவ்வாறு அவர் கூறினார்.

சிறப்பு சட்டசபை கூட்டத்திற்கு அழைப்பு

இதற்கிடையே புதிய மதுபானக் கொள்கை வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள விவகாரம் குறித்து விவாதிக்க, நாளை சிறப்பு சட்டசபை கூட்டத்திற்கு, புதுடில்லி அரசு அழைப்பு விடுத்துள்ளது.



- - நமது டில்லி நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

Devan - Chennai,இந்தியா
16-ஏப்-202310:28:57 IST Report Abuse
Devan If you are clean face c b I and prove yourself. Go to court. Don't cry in media and your party meeting.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
16-ஏப்-202310:12:32 IST Report Abuse
Kasimani Baskaran புறவாசல் மூலம் ஐஐடியில் நுழைந்து படித்து அதன் பின்னர் ஆட்சியிலும் மிஸ்டர் கிளீன் என்பது போல உருட்டு உருட்டு என்று உருட்டி இன்று தீம்காவுக்கே பாடம் எடுக்கும் அளவில் சிறப்பாக ஊழல் செய்யும் தலைமை துடைப்பத்தை நீதிமன்றம் தண்டிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Senthil - Proud to be an Indian - Paramakudi,இந்தியா
16-ஏப்-202309:18:12 IST Report Abuse
Senthil - Proud to be an Indian உலகின் பெரிய யோக்கியவான் சி பி ஐ அலுவலகத்திற்கு வருகிறார்.. இவர் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்... பாவம் புலம்ப வச்சுடீங்களே... அண்ணா ஹசாரே உங்கள் பக்கத்துல இருந்தவரை எப்படி பட்ட ஆள் தெரியுதா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X