குடும்ப தலைவியருக்கு மாதம் ரூ.2000: வாக்குறுதிகளை அள்ளிவீசினார் ராகுல்
குடும்ப தலைவியருக்கு மாதம் ரூ.2000: வாக்குறுதிகளை அள்ளிவீசினார் ராகுல்

குடும்ப தலைவியருக்கு மாதம் ரூ.2000: வாக்குறுதிகளை அள்ளிவீசினார் ராகுல்

Updated : ஏப் 17, 2023 | Added : ஏப் 17, 2023 | கருத்துகள் (40) | |
Advertisement
பெங்களூரு: ''கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் குடும்ப தலைவியருக்கு மாதம் 2000 ரூபாய் உதவித் தொகை அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்,'' என காங்., முன்னாள் எம்.பி., ராகுல் தெரிவித்தார்.கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 10ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான
Rs.2000 per month for head of family: Rahul made promises  குடும்ப தலைவியருக்கு மாதம் ரூ.2000: வாக்குறுதிகளை அள்ளிவீசினார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பெங்களூரு: ''கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் குடும்ப தலைவியருக்கு மாதம் 2000 ரூபாய் உதவித் தொகை அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்,'' என காங்., முன்னாள் எம்.பி., ராகுல் தெரிவித்தார்.


கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 10ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு வெளியான பின் காங்., - முன்னாள் எம்.பி., ராகுல் முதல்முறையாக கர்நாடகாவுக்கு நேற்று வந்தார்.


கோலாரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: பார்லிமென்டில் அதானி விவகாரத்தை நான் எழுப்பக்கூடாது என்பதற்காக பார்லிமென்ட் செயல்பட விடாமல் பா.ஜ., தடுத்தது. வழக்கமாக எதிர்கட்சியினர் தான் பார்லிமென்ட் கூட்டத்தை நடத்தவிடாமல் இடையூறு செய்வர். இந்தமுறை அதை பா.ஜ.,வினரே செய்தனர்.


latest tamil news

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் 'கிருஹ ஜோதி' திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். 'கிருஹ லட்சுமி' திட்டத்தின் கீழ் குடும்ப தலைவியர் அனைவருக்கும் மாதம் 2000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்.


'அன்ன பாக்யா' திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினர் அனைவருக்கும் மாதம் தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3000 ரூபாயும் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் 1500 ரூபாய் உதவி தொகையும் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.


காங்கிரஸ் வெற்றி பெற்ற பின் நடக்கும் முதல் அமைச்சரவை குழு கூட்டத்தில் இந்த திட்டங்கள் அனைத்தும் அமலுக்கு வரும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (40)

Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
17-ஏப்-202320:56:43 IST Report Abuse
Ramesh Sargam காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாங்கள் நேர்மையாக, ஊழல் அற்ற ஆட்சி புரிந்து மக்களுக்கு தேவையான எல்லா வற்றையும் செய்வோம் என்று கூறி தேர்தலில் வெற்றிபெற முயலுங்கள் பார்க்கலாம். எப்பொழுதும் அவ்வளவு பணம் கொடுப்போம், இலவசமாக எதையாவது கொடுப்போம் என்று மக்களை ஏமாற்றி, வசியப்படுத்திதான் நீங்கள் ஆட்சியை பிடிக்க பார்க்கிறீர்கள். கேவலம்.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
17-ஏப்-202320:03:14 IST Report Abuse
sankaranarayanan குடும்பமே இல்லாத பப்புவிற்கு குடும்பத்தைப்பற்றி என்ன தெரியும்
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
17-ஏப்-202320:02:15 IST Report Abuse
M  Ramachandran ரீல் விடுவதை நிறுத்த வேண்டும் . உ .பி தேர்தலில் ப்ரியங்கா இப்படி எடுத்து விட்டு கைமேற் பலனாக மக்கள் விரட்டி விட்டு விட்டார்கள் . இஙகு ஒரு யேமாற்று அவசர குடுக்கைய உதார் விட்டு விட்டு முழி பிதுங்குது. மக்கள் அவ்வளவு ஏமாளிகளல்ல. உங்கள் திரைமறைவு ஒப்பந்தங்கள் மக்கள் மனதில் ஆழமக பதிந்து விட்டது. அதற்க்கு தகுந்தபடி விளக்க முடியாமால் மோடியைய்ய மட்டும் திட்டி ஒன்றுக்கும் ஆவப்போவதில்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X