ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு: தி.மு.க., கூட்டணி கட்சிகள் 'ஷாக்'
ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு: தி.மு.க., கூட்டணி கட்சிகள் 'ஷாக்'

ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு: தி.மு.க., கூட்டணி கட்சிகள் 'ஷாக்'

Updated : ஏப் 18, 2023 | Added : ஏப் 18, 2023 | கருத்துகள் (44) | |
Advertisement
சென்னை : நான்கு நாட்கள் அவகாசத்தில், தமிழகம் முழுதும் ஒரே நாளில் 45 இடங்களில், ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடத்தியிருப்பதும், அதில் 35 ஆயிரத்திற்கு அதிகமானோர் சீருடையுடன் பங்கேற்றதும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.கடந்த 2022 அக்., 2-ல், தமிழகம் முழுதும் 51 இடங்களில் சீருடை அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த, ஆர்.எஸ்.எஸ்., அனுமதி
RSS marches on: DMK, allies shock   ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு: தி.மு.க., கூட்டணி கட்சிகள் 'ஷாக்'

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : நான்கு நாட்கள் அவகாசத்தில், தமிழகம் முழுதும் ஒரே நாளில் 45 இடங்களில், ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடத்தியிருப்பதும், அதில் 35 ஆயிரத்திற்கு அதிகமானோர் சீருடையுடன் பங்கேற்றதும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


கடந்த 2022 அக்., 2-ல், தமிழகம் முழுதும் 51 இடங்களில் சீருடை அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த, ஆர்.எஸ்.எஸ்., அனுமதி கோரியது.

அதற்கு காவல் துறை அனுமதி மறுக்கவே, சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்றது.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடத்த தடை இல்லை என, 11-ம் தேதி உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து நான்கு நாட்கள் இடைவெளியில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 45 இடங்களில் சீருடை அணிவகுப்பு நடந்தது.

இதில் 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றதாகஆர்.எஸ்.எஸ்., தெரிவித்துள்ளது.


latest tamil news


சென்னை கொரட்டூரில் நடந்த அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலத் தலைவர் வன்னியராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர், சீருடையுடன் பங்கேற்றனர்.

அப்போது பேசிய வன்னியராஜன், 'ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்காக நாங்கள் எந்த விளம்பரமும் செய்யவில்லை. அப்படி செய்யும் வழக்கமும் இல்லை. ஆனால், தி.மு.க., அரசு தடை விதித்ததன் வாயிலாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று சேர்ந்துள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி' என்றார்.


இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்., மாநில நிர்வாகிகள் கூறியதாவது:


ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு என்பது வழக்கமாக, அரசியல் கட்சிகள், அமைப்புகள் நடத்தும் பேரணி, ஊர்வலம் போன்றது அல்ல. பழுப்பு நிற பேன்ட், வெள்ளை முழுக்கை சட்டை, கருப்பு நிற தொப்பி, கருப்பு 'ஷூ, பெல்ட்' என, சீருடைக்காக, ஒருவர் குறைந்தது 2,000 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பின் கிடைத்த நான்கு நாட்கள் அவகாசத்தில், அனைத்து இடங்களில் வெற்றிகரமாக அணிவகுப்பு நடந்துள்ளது. எதிர்பார்த்ததை விட அதிகமானோர் அணிவகுப்பில் ஆர்வமுடன் பங்கேற்றனர். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., கட்டமைப்பு வலுவாக இருப்பதையே இது காட்டுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

'தமிழகத்தில் பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்.,சை காலுான்ற விட மாட்டோம்' என, தி.மு.க.,வும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளும் நீண்ட காலமாக பேசி வருகின்றன.

தற்போது, தமிழகத்தில் மிக அமைதியாக ஆர்.எஸ்.எஸ்., வளர்வதாக, தி.மு.க., கூட்டணியை சேர்ந்தவர்கள் சமூக ஊடங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (44)

M Ramachandran - Chennai,இந்தியா
19-ஏப்-202318:39:21 IST Report Abuse
M  Ramachandran RSS ஊர்வலம் தமிழகத்தில் இது நாள் வரைபூச்சாண்டி விதைய்ய காட்டியவர்கள் திருடர்கள் யேமாற்று எத்தர்கள்லின் உண்மையான கரி பூசிய முகம் மக்களுக்கு தெளிவாகா காட்டி விட்டது
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
19-ஏப்-202313:46:50 IST Report Abuse
தஞ்சை மன்னர் ஹி ஹி விஷயம் வெளியே வந்து விட்டது ஒவ்வொருவருக்கும் ரூபாய் 5000/- கொடுக்கப்பட்டு உள்ளது பி சே பி யின் கார்போர்ட் டோனேஷன் இப்படித்தான் வெளியே வரும்
Rate this:
Chandradas Appavoo - Kuzhithurai,இந்தியா
20-ஏப்-202319:31:43 IST Report Abuse
Chandradas Appavooஉனக்கு தானே முதலில் கிடைத்தது...
Rate this:
Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா
21-ஏப்-202303:52:44 IST Report Abuse
Sathyasekaren Sathyanarayananaசொந்த பெயரில் கருது எழுத தயிரியம் இல்லாத நீங்க மன்னரா?...
Rate this:
Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா
21-ஏப்-202303:58:54 IST Report Abuse
Sathyasekaren Sathyanarayananaஅட அறிவாளி பெயர் இல்லா மன்னரே, ஒழுங்கா படி, சொந்த செலவில் என்று சொல்லி இருக்கார்....
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
19-ஏப்-202307:07:02 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN நாம் ஒருவரை எதிர்த்தால் நமது "தகுதி" பற்றி உள்ளபடி அறிந்த அனைவரும் நம் எதிரியை ஆதரிக்கவோ எதிர்க்கவோ செய்வார்கள் .... இந்த எளிய உண்மை திருட்டு திராவிட களிமண்ணு மண்டையர்களுக்கு புரியலையா ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X