அட்டிக் அஹமது கொலை விவகாரம்: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
அட்டிக் அஹமது கொலை விவகாரம்: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

அட்டிக் அஹமது கொலை விவகாரம்: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Updated : ஏப் 18, 2023 | Added : ஏப் 18, 2023 | கருத்துகள் (16) | |
Advertisement
லக்னோ: உத்தர பிரதேசத்தில் முன்னாள் எம்.பி., அட்டிக் அஹமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அஹமது ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் தலையிட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.,வாக இருந்த ராஜு பால் என்பவர் 2005ல் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நிழல் உலக தாதாவும்,சமாஜ்வாதி கட்சியின் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,வான அட்டிக் அஹமது
Atiq Ahmed murder case: National Human Rights Commission notice  அட்டிக் அஹமது கொலை விவகாரம்: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லக்னோ: உத்தர பிரதேசத்தில் முன்னாள் எம்.பி., அட்டிக் அஹமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அஹமது ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் தலையிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.,வாக இருந்த ராஜு பால் என்பவர் 2005ல் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நிழல் உலக தாதாவும்,சமாஜ்வாதி கட்சியின் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,வான அட்டிக் அஹமது மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.


latest tamil news


ராஜு பால் படுகொலை வழக்கின் முக்கிய சாட்சியான உமேஷ் பால் என்பவர் கடந்த பிப்., 24ல், பிரயாக்ராஜில் உள்ள அவரது வீட்டு வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் அவரது பாதுகாப்பு போலீசார் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில், அட்டிக் அஹமது, அவரது சகோதரர் அஷ்ரப், மகன் ஆசாத், அவரது கூட்டாளி குலாம் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து, அட்டிக் அஹமதுவையும், அவரது சகோதரர் அஷ்ரபையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், , கடந்த 15ம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக முக்கிய குற்றவாளியான அட்டிக் அஹமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் பிரயாக்ராஜ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது மூன்று பேர் அட்டிக் மற்றும் அவரது சகோதரரை சுட்டுக் கொன்றனர்.இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தேசிய மனித உரிமை ஆணையம் பாஜ.,முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (16)

Ajp -  ( Posted via: Dinamalar Android App )
19-ஏப்-202310:44:22 IST Report Abuse
Ajp ஆளாளுக்கு துப்பாக்கி எடுத்தால் அரசாங்கமும் நீதிமன்றமும் எதற்கு?
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
19-ஏப்-202307:57:08 IST Report Abuse
raja இப்போ மனித உரிமை என்பது திருடர்கள் கொள்ளைக்காரர்கள் கொலைகாரர்கள் கற்பழிப்பு நடத்துபவர்களின் உரிமை போல... ஈ லோகத்தில் கலி முத்திடுத்து...
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
19-ஏப்-202307:44:52 IST Report Abuse
 N.Purushothaman ஒரு ரவுடி கொலை கொள்ளையில் ஈடுபட்டவனை ஹீரோவாக்கும் முயற்சி இந்தியாவை தவிர வேறெந்த நாட்டிலும் நடக்காது ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X