சிறுவன் ஓட்டிய காரால் விபத்து நடந்து சென்ற சிறுமி பலி
சிறுவன் ஓட்டிய காரால் விபத்து நடந்து சென்ற சிறுமி பலி

சிறுவன் ஓட்டிய காரால் விபத்து நடந்து சென்ற சிறுமி பலி

Added : மே 02, 2023 | கருத்துகள் (11) | |
Advertisement
திருப்பூரில், சிறுவன் ஓட்டி சென்ற கார், ரோட்டை கடக்க முயன்ற சிறுமி மீது மோதியதில் பரிதாபமாக இறந்தார்.திருப்பூர், தாராபுரம் ரோடு, கோவில் வழி, வாய்க்கால் மேட்டை சேர்ந்த ஆதிநாராயணன் மகள் தீபிகா, 12. அருகிலுள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை, முத்தணம்பாளையம் - தாராபுரம் ரோட்டில் கடைக்கு செல்ல சிறுமி நடந்து சென்றார்.அப்போது சிறுமி ரோட்டை கடக்க
A girl who was walking was killed in an accident by a car driven by a boy   சிறுவன் ஓட்டிய காரால் விபத்து நடந்து சென்ற சிறுமி பலி

திருப்பூரில், சிறுவன் ஓட்டி சென்ற கார், ரோட்டை கடக்க முயன்ற சிறுமி மீது மோதியதில் பரிதாபமாக இறந்தார்.

திருப்பூர், தாராபுரம் ரோடு, கோவில் வழி, வாய்க்கால் மேட்டை சேர்ந்த ஆதிநாராயணன் மகள் தீபிகா, 12. அருகிலுள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை, முத்தணம்பாளையம் - தாராபுரம் ரோட்டில் கடைக்கு செல்ல சிறுமி நடந்து சென்றார்.

அப்போது சிறுமி ரோட்டை கடக்க முயன்றார். அதே வழியே வந்த காரின் டிரைவர், காரை நிறுத்த முயன்ற போது கவிழ்ந்து, சிறுமி மீது மோதி விபத்து ஏற்பட்டது. பலத்த காயமடைந்த சிறுமி பரிதாபமாக இறந்தார். கவிழ்ந்த காரில் இருந்தவரை அப்பகுதியினர் மீட்டனர்.

இது குறித்து நல்லுார் போலீசாரின் விசாரணையில், காரை ஓட்டியது, அப்பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுவன், என்பதும், தனியாக காரை ஓட்டி வந்ததும் தெரிந்தது.

லேசான காயத்துடன் சிறுவன் உயிர் தப்பினார். அவரை மீட்ட மக்கள், சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நல்லுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (11)

N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
07-மே-202310:10:12 IST Report Abuse
N Annamalai கொடுமை .சோகம்
Rate this:
Cancel
krishnamurthy - chennai,இந்தியா
06-மே-202317:50:01 IST Report Abuse
krishnamurthy ஏன் கைது செய்யவில்லை
Rate this:
Cancel
rama adhavan - chennai,இந்தியா
06-மே-202306:16:43 IST Report Abuse
rama adhavan அரசியல்வாதியாக பெற்றோர் இருந்தால் தண்டனை அதிகம் கிடைக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X