நேர்மையான அதிகாரிகளுக்கு திமுக ஆட்சியில் இடம் கிடையாது: பழனிசாமி
நேர்மையான அதிகாரிகளுக்கு திமுக ஆட்சியில் இடம் கிடையாது: பழனிசாமி

நேர்மையான அதிகாரிகளுக்கு திமுக ஆட்சியில் இடம் கிடையாது: பழனிசாமி

Updated : மே 02, 2023 | Added : மே 02, 2023 | கருத்துகள் (17) | |
Advertisement
சென்னை: நேர்மையான அதிகாரிகளுக்கு இந்த திமுக ஆட்சியில் இடம் கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.இது குறித்து பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த வாரம் நேர்மையாக பணியாற்றிய விஏஓ., தூத்துக்குடி மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார், சில தினங்களுக்கு முன்னால் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு விஏஓ., மணல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: நேர்மையான அதிகாரிகளுக்கு இந்த திமுக ஆட்சியில் இடம் கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.




latest tamil news


இது குறித்து பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த வாரம் நேர்மையாக பணியாற்றிய விஏஓ., தூத்துக்குடி மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார், சில தினங்களுக்கு முன்னால் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு விஏஓ., மணல் கொள்ளையர்களால் கொலை முயற்சிக்கு ஆளாக்கப்பட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார் ,


தற்போது 2019 அதிமுக ஆட்சியில் சிறப்பாக பணியாற்றி என்னிடம் விருது பெற்ற கிராம நிர்வாக அதிகாரி அருப்புக்கோட்டை விஏஓ., துரை பிருத்விராஜ் தன் பணியை நேர்மையாக செய்ய இயலவில்லை என்பதால் வேலையை ராஜினாமா செய்துள்ளது வருத்தத்தை அளிக்கிறது. நேர்மையான அதிகாரிகளுக்கு இந்த திமுக ஆட்சியில் இடம் கிடையாது என்பதும் இதன்மூலம் நிரூபணமாகிறது.



latest tamil news

இவ்வாட்சியில் அரசு அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாததாலும் , மக்கள் பணி செய்வதற்கு நிர்வாகமே தடையாக இருப்பதாலும் பல்வேறு நிர்வாக திறமையுள்ள அதிகாரிகளை இழந்து வருகிறோம். அரசு அதிகாரிகள் என்றும் மனம் தளராது, தொடர்ந்து மக்களுக்கு நல்ல பணிகள் பல செய்திட வேண்டுகோள் விடுக்கிறேன்.


விரைவில் அதிமுக ஆட்சி மலரும் , நிர்வாக திறமையோடு நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரமும் பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி கூறுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (17)

Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
03-மே-202304:29:56 IST Report Abuse
Palanisamy T திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டுக் கட்சிகளும் நேர்மையான கட்சிகளாக செயல்பட்டார்களா? தமிழக அரசில் நேர்மையான அதிகாரிகள் வேலை செய்ய முடிந்ததா? அறிஞர் அண்ணா வோடு திமுக போச்சு எம்ஜிஆர் என்ற மாமனிதரோடு அதிமுக போச்சு. கருணா நீதி வந்த கையோடு திமுக குட்டிச் சுவரை நோக்கி பயணிக்க அரம்பிக்கவிட்டது. அவர்களுக்கு காங்கிரஸ் கூட்டு பிடிக்கும் அப்போதுதான் நல்ல பதவிகள் நிறைய வாங்கி கோடிக் கோடியாக சேர்க்கலாம். ஜெயா முதலமைச்சராக இருந்தபோது அவர்களை சந்திக்கச் சென்ற மந்திரிகள் தலையை தொங்கப் போட்டு நொண்டி நொண்டிச் சென்றுதானே அவர்களை சந்தித்தார்கள். தலைவி மேல் அவ்வளவு மரியாதை தன் கட்சித் தலைவர்களை அடிமைகள் போல்தானே நடத்தினார். அப்படியென்றால் தமிழக அரசின் நேர்மையான அதிகாரிகளின் நிலை எப்படி யிருந்திருக்கும். இப்போது நீங்கள் முன் செய்த ஊழல்களிலிருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ள பாஜக வோடு கூட்டு. போதுமையா உங்கள் நாடக மெல்லாம்
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
03-மே-202300:16:14 IST Report Abuse
S.Ganesan தமாசு தமாசு. இதை கேட்டு நான் ஷாக் ஆயிட்டேன்
Rate this:
Cancel
ramesh - chennai,இந்தியா
02-மே-202320:18:01 IST Report Abuse
ramesh நேர்மையை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது எடப்பாடிக்கு மேஜையின் கீழே இருந்த தரை கேட்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X