அமைச்சர்களை கண்டிக்க முதல்வருக்கு அதிகாரமில்லை
அமைச்சர்களை கண்டிக்க முதல்வருக்கு அதிகாரமில்லை

அமைச்சர்களை கண்டிக்க முதல்வருக்கு அதிகாரமில்லை

Updated : மே 03, 2023 | Added : மே 03, 2023 | கருத்துகள் (71) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்ச.சுந்தரம், நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கல்லுாரி மாணவியருக்கு மாதம், 1,000 ரூபாய் தருகிறோம்; மொபைல் போன் வாங்கலாம்; யாரிடமாவது ரகசியமாக பேசலாம்; யாரையாவது கூப்பிட்டு சினிமாவுக்கும் போகலாம்' என்று, தி.மு.க., பொதுச்செயலரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன்
The Chief Minister has no authority to reprimand ministers  அமைச்சர்களை கண்டிக்க முதல்வருக்கு அதிகாரமில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்


ச.சுந்தரம், நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கல்லுாரி மாணவியருக்கு மாதம், 1,000 ரூபாய் தருகிறோம்; மொபைல் போன் வாங்கலாம்; யாரிடமாவது ரகசியமாக பேசலாம்; யாரையாவது கூப்பிட்டு சினிமாவுக்கும் போகலாம்' என்று, தி.மு.க., பொதுச்செயலரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் துடுக்குத்தனமாக பேசி, தமிழகத்தில் வாழும் பெண்கள் அனைவரையும் கொச்சைப்படுத்தி உள்ளார்.

இவர்களிடம், 'எங்களுக்கு மாதம், 1,000 ரூபாய் கொடுங்கள்...' என்று அம்மாக்களோ, பொண்ணுங்களோ கேட்டனரா? இவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கோலோச்சுவதற்காக, சகட்டு மேனிக்கு வாக்குறுதிகளை வாரி வாரி வழங்கினர். தற்போது, தாங்கள் சொன்னதை, தாங்களே கேலியும், கிண்டலும், ஏளனமும் செய்வது எந்த வகையில் நியாயம்?


latest tamil news


துரைமுருகன் மட்டுமல்ல... பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.,ராமச்சந்திரன் என பலரும், அதிகப் பிரசங்கித்தனமாக பேசி, மக்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

அமைச்சர்களின் இந்த ஆணவம் மற்றும் அகம்பாவம் கலந்த பேச்சைக் கேட்டு வெகுண்டெழும் மக்களை சமாதானப்படுத்த, முதல்வர் தலையிட்டு, அமைச்சர்களை கண்டித்தால், நிலைமை சரியாகி விடும்; அவர்கள் திருந்தி விடுவர் என்று நம்பி, இப்பகுதிக்கு கடிதம் எழுதி வருகின்றனர். அவர்களை நினைத்தால், பரிதாபமாக இருக்கிறது.

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அனைவருமே, தங்களை, 'முதல்வர்' ஆகவே நினைக்கின்றனர். தாங்கள் அமைச்சர் தான், தங்களுக்கு மேலாக ஒரு முதல்வர் இருக்கிறார் என்று எண்ணிப் பார்ப்பதே இல்லை. அதனால் தான், அவர்கள் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் ஒவ்வொன்றும், விஷம் தோய்ந்ததாக உள்ளன.

முதல்வர் மிகவும் பாவம்... தினமும் ஒரு முறை தான், 'தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது' என்று சொல்வதற்கும், அவரின் கையில் கொடுக்கும் துண்டுச் சீட்டை பார்த்து படிப்பதற்கும் மட்டுமே, அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறதே தவிர, அத்துமீறும் அமைச்சர்களை கண்டிக்கும் அளவுக்கும், நாட்டை நிர்வகிப்பதற்கும் அதிகாரம் அளிக்கப்படவில்லை.

அமைச்சர்களின் அடாவடி பேச்சுக்களை சகித்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள் மக்களே... அவர்களின் குதர்க்கமான பேச்சுக்கள் காதுகளில் விழும் போது, அதுவிழாத வகையில், காதுகளை இறுக்க மூடிக் கொள்ளுங்கள்; வேறு வழியே இல்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (71)

s sambath kumar - chennai,இந்தியா
09-மே-202311:57:51 IST Report Abuse
s sambath kumar அமைச்சரவையில் ஒரு மூஞ்சி கூட சரியில்லை.எல்லாம் திருட்டு மூஞ்சியாவே தெரியுது.கண்ணை செக் பண்ணனும்
Rate this:
Cancel
Muthu - Nagaipattinam,இந்தியா
04-மே-202307:08:15 IST Report Abuse
Muthu துரைமுருகன், பொன்முடி, நேரு, ராமசந்திரன், உதயநிதி என எல்லாரும் மக்களை ஒரு உயிருள்ள பொருளாகவே பார்ப்பதில்லை.. சாதாரண ஓட்டு என்றே பார்க்கிறார்கள்... எனவே ஓட்டு போடும் தேர்தல் நேரத்தில் மக்கள் விழித்துக்கொண்டு ஒரு முறை பிஜேபி கட்சிக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கவேண்டும். அதுவே மாநிலத்தை சரி செய்யவும், இவர்கள் கொட்டத்தை அடக்கவும் வழி வகுக்கும்.
Rate this:
Cancel
Mohan das GANDHI - PARIS,பிரான்ஸ்
03-மே-202323:16:26 IST Report Abuse
Mohan das GANDHI IF A UNFIT CM RULES TAMILNADU THE DRAVIDA MODEL TEM AND LAW AND ORDER DESORDER TOTALY FAILURES. MOST OD DMK MINISTERS OVER EXAGERATED LOOSE TALKING IN PUBLIC THAT CM STALIN FAILED TO MAKE THEM CORRECTION VERY PITY ?THIS MP ELECTION DMK WILL NOT GET EVEN ONE SEAT ALL DMK WILL LOOSE THEIR DEPOSIT MONEY IS REALITY DUE TO CORRUPTION IS IN PLACE BY DMK FILES IS REFERENCE GIVEN BY BJP TAMILNADU LEADER MR.ANNAMALAI IPS POLICE OFFICER IS FACT.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X