குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Added : மே 03, 2023 | |
Advertisement
திருவாலங்காடு:சென்னை -- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூர் அடுத்துள்ளது மணவூர் ரயில் நிலையம். இங்கு பாகசாலை, மருதவல்லிபுரம், குப்பம் கண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பயணியர், சென்னை, திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில், மணவூர் ரயில் நிலைய பகுதி மற்றும் கடைகளில் சேகரமாகும் குப்பைக் கழிவுகள்,
Sanitation due to garbage disposal   குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு

திருவாலங்காடு:சென்னை -- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூர் அடுத்துள்ளது மணவூர் ரயில் நிலையம். இங்கு பாகசாலை, மருதவல்லிபுரம், குப்பம் கண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பயணியர், சென்னை, திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், மணவூர் ரயில் நிலைய பகுதி மற்றும் கடைகளில் சேகரமாகும் குப்பைக் கழிவுகள், ரயில் நிலையம் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தும் பகுதியில் கொட்டப்படுகிறது.

அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும், ரயில் நிலையம் வரும் பயணியரும் முகம் சுளிக்கின்றனர்.

எனவே,தேங்கியுள்ள குப்பைக் கழிவுகளை அகற்றி, மீண்டும் அங்கு குப்பை கொட்டாமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X