கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டுக்கு, காய்கறிகளின் வரத்து வழக்கத்தை விட குறைந்ததால், விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து, விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை கொண்டு வருகின்றனர்.
மேலும், கேரள மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் இங்கு வருவதால், காய்கறிகள் உடனுக்குடன் விற்பனையாகிறது. மற்ற காய்கறியை காட்டிலும், தக்காளி வரத்து அதிகம் உள்ளது.
விவசாயிகள் கூறியதாவது:
இந்த வாரம் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. மேலும், காய்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில், நேற்று தக்காளி பெட்டி (15 கிலோ) 120 முதல் 150 வரை; தேங்காய் (ஒன்று), 8 முதல் 12 வரை வரை விற்பனையானது. கத்தரிக்காய் கிலோ - 40, முருங்கைகாய் --- 45, அவரைக்காய் - 70, வெண்டைக்காய் -- 30, முள்ளங்கி --- 8, வெள்ளரிக்காய் --- 20, பூசணிக்காய் - 9, அரசாணிக்காய் - 10, பாகற்காய் - 40, புடலை - 20, பீர்க்கங்காய் - 40, சுரைக்காய் - 15, பச்சைமிளகாய் - 45, பீட்ரூட் - 15, மாங்காய் -- 30, ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இதில், கத்தரி கிலோவுக்கு 15 ரூபாய்; முருங்கை - 20, மாங்காய் - 10 ரூபாய் வீதம் விலை உயர்ந்துள்ளது. மற்ற காய்கறிகளின் விலை சரிந்துள்ளது. குறிப்பாக பூசணி கிலோவுக்கு 12 ரூபாய், முள்ளங்கி - 12, வெண்டை -- 35 ரூபாய் விலை சரிந்துள்ளது.
இவ்வாறு, கூறினர்.