கூடலுார்: கூடலுார் பாடந்துறை சுண்டவயல் பகவதி அம்மன் மற்றும் உளிய மாஞ்சோலை பரதேவன் கோவிகளில் தேங்காய் உடைப்பு திருவிழா நடந்தது.
அதில், மவுண்டாடன் செட்டி, பழங்குடி மக்களின் பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சி நடந்தது. காலை, 11:30 மணிக்கு அருள் வாக்கு கூறும் நிகழ்ச்சி; தேங்காய் உடைப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, உளிய மாஞ்சோலை பரதேவன் கோவிலில் தேங்காய் உடைத்தனர். விழாவில், 3,000 தேங்காய்கள் உடைக்கப்பட்டது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.