சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரையில் 10 நாள் கொண்டாடப்படும் பிரம்மோற்சவ விழா, இன்று அதிகாலை 5:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும், 5ல் காலை 6:15 மணிக்கு சேஷ வாகனத்தில், பரமபதநாதன் திருக்கோலக் காட்சி நடக்கிறது. இரவு, சிம்ம வாகன புறப்பாடு நடக்கிறது.
வரும், 6ல் அதிகாலை 5:15 மணிக்கு கோபுர தரிசனத்துடன் கருட சேவை உற்சவம் நடக்கிறது. நண்பகல் ஏகாந்த சேவையும், இரவு அம்ச வாகன புறப்பாடும் நடக்கிறது.
முக்கிய நாளான, 10ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. காலை 5:00 மணி முதல் 6:00 மணிக்குள், பெருமாள் தேரில் எழுந்தருள்கிறார். காலை 7:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்படுகிறது.
மே, 11ல் காலை வெண்ணெய் தாழி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவை நடக்கிறது. வரும் 12ல் காலை 6:15 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், இரவு கண்ணாடி பல்லக்கு சேவையும் நடக்கிறது. தொடர்ந்து, கொடி இறக்கத்துடன் விழா பூர்த்தியாகிறது.