பார்த்தசாரதி கோவிலில் இன்று பிரம்மோற்சவ கொடியேற்றம்

Added : மே 04, 2023 | |
Advertisement
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரையில் 10 நாள் கொண்டாடப்படும் பிரம்மோற்சவ விழா, இன்று அதிகாலை 5:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும், 5ல் காலை 6:15 மணிக்கு சேஷ வாகனத்தில், பரமபதநாதன் திருக்கோலக் காட்சி நடக்கிறது. இரவு, சிம்ம வாகன புறப்பாடு நடக்கிறது. வரும், 6ல் அதிகாலை 5:15



சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரையில் 10 நாள் கொண்டாடப்படும் பிரம்மோற்சவ விழா, இன்று அதிகாலை 5:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும், 5ல் காலை 6:15 மணிக்கு சேஷ வாகனத்தில், பரமபதநாதன் திருக்கோலக் காட்சி நடக்கிறது. இரவு, சிம்ம வாகன புறப்பாடு நடக்கிறது.

வரும், 6ல் அதிகாலை 5:15 மணிக்கு கோபுர தரிசனத்துடன் கருட சேவை உற்சவம் நடக்கிறது. நண்பகல் ஏகாந்த சேவையும், இரவு அம்ச வாகன புறப்பாடும் நடக்கிறது.

முக்கிய நாளான, 10ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. காலை 5:00 மணி முதல் 6:00 மணிக்குள், பெருமாள் தேரில் எழுந்தருள்கிறார். காலை 7:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்படுகிறது.

மே, 11ல் காலை வெண்ணெய் தாழி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவை நடக்கிறது. வரும் 12ல் காலை 6:15 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், இரவு கண்ணாடி பல்லக்கு சேவையும் நடக்கிறது. தொடர்ந்து, கொடி இறக்கத்துடன் விழா பூர்த்தியாகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X