திரவுபதி அம்மன் விழாவில் துரியோதனன் படுகளம்

Added : மே 04, 2023 | |
Advertisement
சோழவந்தான் : சோழவந்தான் கோயில் பூக்குழி பிரம்மோற்ஸவ விழாவில் திரவுபதி அம்மன் வேடமணிந்து துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.இவ்விழாவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. நேற்றுமுன்தினம் இரவு அம்மன் கூந்தல் விரித்து நான்கு ரத வீதியில் வலம் வந்தார். துரியோதனன் படுகளம் நோக்கி ஆவேசத்துடன் வந்து வதம் செய்து, அவரது குடலை உருவி கழுத்தில்
Duryodhana Padukalam at the Draupadi Amman festival   திரவுபதி அம்மன் விழாவில் துரியோதனன் படுகளம்



சோழவந்தான் : சோழவந்தான் கோயில் பூக்குழி பிரம்மோற்ஸவ விழாவில் திரவுபதி அம்மன் வேடமணிந்து துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.

இவ்விழாவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. நேற்றுமுன்தினம் இரவு அம்மன் கூந்தல் விரித்து நான்கு ரத வீதியில் வலம் வந்தார்.

துரியோதனன் படுகளம் நோக்கி ஆவேசத்துடன் வந்து வதம் செய்து, அவரது குடலை உருவி கழுத்தில் மாலையாக அம்மன் அணிந்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

நேற்று அம்மன் பூக்குழி மண்டகப்படி சென்றார். மாலையில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மன் காமதேனு வாகனத்தில் பவனி வந்தார். சங்கங்கோட்டை கிராமத்தினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். செயல் அலுவலர் இளமதி, பரம்பரை அறங்காவலர்கள் அர்ஜுனன், திருப்பதி, ஜவகர்லால், குப்புசாமி, கமிட்டி ஆலோசகர் முருகேசன் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X