கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் ரயில் மோதி வாலிபர் இறந்தார்.
சின்னசேலம் சார்பதிவாளர் அலுவலகம் அருகே நேற்று அதிகாலை 4:00 மணியளவில் வாலிபர் ஒருவர் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார். தகவலறிந்த சேலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இறந்தவர் சின்னசேலம் பிள்ளயைார் கோவில் தெருவைச் சேர்ந்த தங்கராசு மகன் சங்கர்,30; என்பதும், இயற்கை உபாதைக்காக ரயில் பாதையை கடக்கும் போது விருத்தாசலம் - சேலம் நோக்கி சென்ற பயணிகள் ரயில் மோதி இறந்ததும் தெரியவந்தது.
விபத்து குறித்து சேலம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ரயில் மோதி வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.