காலி பணியிடங்களை நிரப்பக்கோரி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : மே 04, 2023 | |
Advertisement
கடலுார்: காலி பணியிடங்களை நிரப்ப கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சத்துணவு மையங்களில், சத்துணவு வழங்க ஏதுவாக விலைவாசிக்கு ஏற்ப உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்ற வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட
Food workers protest to fill vacant posts   காலி பணியிடங்களை நிரப்பக்கோரி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்



கடலுார்: காலி பணியிடங்களை நிரப்ப கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்துணவு மையங்களில், சத்துணவு வழங்க ஏதுவாக விலைவாசிக்கு ஏற்ப உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்ற வேண்டும்.

காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், கடலுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகம்மாள் தலைமை தாங்கினார். மல்லிகா, புஷ்பலதா, திவ்யா, லட்சுமி, சரளா, செல்வநாயகி, சந்திரா முன்னிலை வகித்தனர். கவுரி வரவேற்றார்.

மாவட்ட செயலாளர் ரங்கசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சத்துணவு ஊழியர்கள் பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.ரேவதி நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X