ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே மேவளூர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 23. இவர் வீட்டின் மொட்டை மாடியில் நின்று பக்கத்து வீட்டில் வசிக்கும் 10 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக சைகை காட்டி சில்மிஷம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் அந்த இளைஞரிடம் கேட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ராஜேஷ், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இதையடுத்து ராஜேஷ் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.