நிதி நிறுவனத்தில் பணம் இழந்தவர் தற்கொலை

Added : மே 04, 2023 | |
Advertisement
வேலுார்:வேலுார் அருகே, ஐ.எப்.எஸ்., நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்ததால், தற்கொலை செய்து கொண்ட இன்ஜினியர் உடலுடன் உறவினர்கள் மறியல் நடத்தினர். வேலுார் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத், 39. தனியார் நிறுவன இன்ஜினியர். இவர், கடன் வாங்கி, ஐ.எப்.எஸ்., நிதி நிறுவனத்தில், 26 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். நிதி நிறுவன நிர்வாகிகள் தலைமறைவானதால்,

வேலுார்:வேலுார் அருகே, ஐ.எப்.எஸ்., நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்ததால், தற்கொலை செய்து கொண்ட இன்ஜினியர் உடலுடன் உறவினர்கள் மறியல் நடத்தினர்.

வேலுார் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத், 39. தனியார் நிறுவன இன்ஜினியர். இவர், கடன் வாங்கி, ஐ.எப்.எஸ்., நிதி நிறுவனத்தில், 26 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார்.

நிதி நிறுவன நிர்வாகிகள் தலைமறைவானதால், மனமுடைந்த பிரசாத், கடந்த 2ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, குடியாத்தம் டவுன் போலீசார் விசாரித்து வரும் நிலையில், பிரசாத் உடலுடன் அவரது உறவினர்கள் கல்வேரி கிராமத்தில் நேற்று முன் தினம் சாலை மறியல் நடத்தினர்.

போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X