சென்னை:தொழிற்சாலைகளில் தினமும் 12 மணி நேரம் பணி செய்ய வகை செய்யும் சட்ட முன்வடிவை, தமிழக அரசு அதிகாரக்பூர்வமாக வாபஸ் பெற்றது.
கடந்த ஏப்., 21ம் தேதி சட்டசபையில், 2023ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டம், தனியார் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வழிவகை செய்தது. இச்சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, தி.மு.க., கூட்டணி கட்சிகள் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன.
அதைத் தொடர்ந்து, இந்த சட்ட முன்வடிவு மீதான நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். முறைப்படி சட்டத்தை வாபஸ் பெற உத்தரவிட்டார்.
அதன்படி, சட்ட முன்வடிவு, அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.