விவசாய பணிக்கு 100 நாள் திட்ட தொழிலாளர்? சாத்தியமே இல்லை என அதிகாரிகள் கைவிரிப்பு

Added : மே 05, 2023 | |
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 100 நாள் வேலையை, 10,661 குடும்பத்தினர் நிறைவு செய்துள்ளனர்.விவசாயம் நிறைந்த ஈரோடு மாவட்டத்தில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், ஒரு லட்சத்து, 16,376 குடும்பத்தினர் இணைந்துள்ளனர். நுாறு நாள் வேலை திட்டத்துக்கு அதிகமானவர்கள் செல்வதால், விவசாய பணி, நெசவு சார்ந்தை ஜவுளித்துறை பணிகளுக்கு வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு



ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 100 நாள் வேலையை, 10,661 குடும்பத்தினர் நிறைவு செய்துள்ளனர்.
விவசாயம் நிறைந்த ஈரோடு மாவட்டத்தில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், ஒரு லட்சத்து, 16,376 குடும்பத்தினர் இணைந்துள்ளனர். நுாறு நாள் வேலை திட்டத்துக்கு அதிகமானவர்கள் செல்வதால், விவசாய பணி, நெசவு சார்ந்தை ஜவுளித்துறை பணிகளுக்கு வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. எனவே, அறுவடை காலங்களில் இத்திட்டத்தை நிறுத்த வேண்டும். அல்லது வேளாண் பணிக்கு, அவர்களை அனுப்ப கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது: மாவட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தில், 1 லட்சத்து, 61,265 குடும்பத்தை சேர்ந்த, 3,03,120 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து, 16,376 குடும்பத்தார் வேலை பெறுகின்றனர்.
இவர்களில், 1,431 பேர் மாற்றுத்திறனாளிகள். இவர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள பணி, அரசு சார்ந்த பணிகளை வழங்குகிறோம். விவசாயிகள் கூறுவதுபோல, வேளாண் பணிக்கு இவர்களை அனுப்புவதும், பரிந்துரைப்பதற்கும் அரசு விதிகளில்
வழியில்லை.
இவ்வாறு கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X