திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம், அத்திப்பட்டு ஊராட்சியில் இருந்து, ராமலிங்காபுரம் செல்லும் தார்ச் சாலை, சேதமடைந்து, ஜல்லி, பல்லாங்குழி சாலையாக காட்சியளிக்கிறது.
இந்த சாலை வழியாக, அத்திப்பட்டு, காவேரிராஜபுரம், ரங்காபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், திருவள்ளூர் நகரத்துக்கு சென்று வருகின்றனர்.
அதேபோல, ராமலிங்காபுரம், குன்னவளம் பகுதியைச் சேர்ந்த மக்கள், அரக்கோணம் செல்ல இந்த தார்ச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது, இந்த தார்ச் சாலை ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, பல்லாங்குழி சாலையாக மாறி உள்ளதால், வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
மேலும், தாமாக விபத்தில் சிக்கும் நிலை உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தார்ச் சாலையை விரைந்து சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.