நடமாடும் நுாலக பஸ்: வாசகர்கள் வரவேற்பு

Added : மே 09, 2023 | |
Advertisement
திருப்புல்லாணி, : திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் அருகே மாவட்ட நூலகத்துறை சார்பில் நடமாடும் நூலக பஸ் நிறுத்தப்பட்டதால் வாசகர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.மே 2ல் கலெக்டர் ஜானி டாம் வர்கிஸ் துவக்கி வைத்த நடமாடும் நுாலக பஸ்சில் ஆன்மிகம், மருத்துவம், வேளாண்மை போட்டித் தேர்வுகள், பருவ இதழ்கள், தினமலர் உள்ளிட்ட நாளிதழ்கள் பார்வைக்கு
Mobile Library Bus: Readers welcome   நடமாடும் நுாலக பஸ்: வாசகர்கள் வரவேற்பு



திருப்புல்லாணி, : திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் அருகே மாவட்ட நூலகத்துறை சார்பில் நடமாடும் நூலக பஸ் நிறுத்தப்பட்டதால் வாசகர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

மே 2ல் கலெக்டர் ஜானி டாம் வர்கிஸ் துவக்கி வைத்த நடமாடும் நுாலக பஸ்சில் ஆன்மிகம், மருத்துவம், வேளாண்மை போட்டித் தேர்வுகள், பருவ இதழ்கள், தினமலர் உள்ளிட்ட நாளிதழ்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

பொதுமக்கள், மாணவர்களிடையே வாசிப்பு திறனை அதிகப்படுத்தும் விதமாக காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை மாவட்டத்தின் முக்கிய பகுதிகள் மற்றும் சுற்றுலாத்தலங்களுக்குநடமாடும் நுாலக பஸ் சென்று வருகிறது.

மாவட்ட நூலக அலுவலர் செல்வ சுப்பிரமணியன், பொறுப்பு அலுவலர் நரசிம்ம பல்லவன் உட்பட நூலக அலுவலர்கள் உடன் இருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X