தியேட்டரில் தீ: ரசிகர்கள் ஓட்டம்

Added : மே 12, 2023 | |
Advertisement
கடலுார்: தியேட்டரில் படம் ஓடிக் கொண்டிருந்த போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் ரசிகர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் கடலுாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலுார் பாரதி சாலையில் உள்ள நியுசினிமா தியேட்டரில் பொன்னியின் செல்வன் -2, என்ற திரைப்படம் நேற்று பிற்பகல் காட்சி ஓடிக் கொண்டிருந்தது. மாலை 4:30 மணியளவில், புரொஜக்டர் அறையில் உள்ள 'ஏசி' யில் திடீரென தீ



கடலுார்: தியேட்டரில் படம் ஓடிக் கொண்டிருந்த போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் ரசிகர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் கடலுாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலுார் பாரதி சாலையில் உள்ள நியுசினிமா தியேட்டரில் பொன்னியின் செல்வன் -2, என்ற திரைப்படம் நேற்று பிற்பகல் காட்சி ஓடிக் கொண்டிருந்தது. மாலை 4:30 மணியளவில், புரொஜக்டர் அறையில் உள்ள 'ஏசி' யில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, அருகில் உள்ள துவாரம் வழியாக பார்வையாளர்கள் அரங்கில் புகை மூட்டம் பரவியது. அதிர்ச்சியடைந்த படம் பார்த்துக் கொண்டிருந்த ஆண்களும், பெண்களும் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

உடன், தியேட்டர் ஊழியர்கள், தீயணைப்பு கருவி மூலமாக தீயை அணைத்தனர். படக்காட்சி ரத்து செய்யப்பட்டு, ரசிகர்களுக்கு பணம் திருப்பி தரப்பட்டது. மாலை நேரக் காட்சியும் ரத்து செய்யப்பட்டது.

தகவலறிந்த கடலுார், புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், 'ஏசி' யில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X