பெருமாள் திருத்தேர் திருப்பணி துவக்க பூஜை

Added : மே 12, 2023 | |
Advertisement
அவிநாசி:அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலின் உப கோவிலான ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத கரி வரதராஜ பெருமாளுக்கு திருத்தேர் செய்யும் பணிகள் துவக்கப்பட்டது.அவிநாசி ஸ்ரீகரிவரதராஜ பெருமாளுக்கு, பஞ்சமூர்த்திகள் - 63 நாயன்மார்கள் வழிபாட்டுக்குழு அறக்கட்டளை சார்பில், திருத்தேர் செய்யும் பணிகள் நேற்று துவங்கியது. இதையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜைகள்
Perumal Thiruther Thirupani Inauguration Pooja   பெருமாள் திருத்தேர் திருப்பணி துவக்க பூஜை

அவிநாசி:அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலின் உப கோவிலான ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத கரி வரதராஜ பெருமாளுக்கு திருத்தேர் செய்யும் பணிகள் துவக்கப்பட்டது.

அவிநாசி ஸ்ரீகரிவரதராஜ பெருமாளுக்கு, பஞ்சமூர்த்திகள் - 63 நாயன்மார்கள் வழிபாட்டுக்குழு அறக்கட்டளை சார்பில், திருத்தேர் செய்யும் பணிகள் நேற்று துவங்கியது. இதையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

தம்மம்பட்டி ஸ்தபதி ரவி தலைமையிலான சிற்பிகள் திருத்தேர் செய்யும் பணிகளை துவக்கினர். அடுத்தாண்டு (2024) சித்திரை தேர்த்திருவிழாவுக்கு, பெருமாள் திருத்தேர் திருப்பணிகள் நிறைவுற்று, வெள்ளோட்டம் பார்க்கப்படும் என, அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X