சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழகத்தில் பிரிவினை சிந்தனையை விதைக்கும் திராவிட மாடல்!

Updated : மே 12, 2023 | Added : மே 12, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி பேட்டி: 'திராவிட மாடல் என்ற தி.மு.க.,வின் கோஷம், ஒரே இந்தியா என்பதற்கு எதிரானது' என்ற கவர்னர் ரவியின் குற்றச்சாட்டுக்கு, முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும். தமிழகத்தில் பிரிவினை சிந்தனையை விதைக்கவே, திராவிட மாடல் என, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட, தி.மு.க.,வினர் திரும்ப திரும்பக் கூறி வருகின்றனர்.@subboxhd@எந்த
The Dravidian model of sowing separatism in Tamil Nadu!  தமிழகத்தில் பிரிவினை சிந்தனையை விதைக்கும் திராவிட மாடல்!


புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி பேட்டி:

'திராவிட மாடல் என்ற தி.மு.க.,வின் கோஷம், ஒரே இந்தியா என்பதற்கு எதிரானது' என்ற கவர்னர் ரவியின் குற்றச்சாட்டுக்கு, முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும். தமிழகத்தில் பிரிவினை சிந்தனையை விதைக்கவே, திராவிட மாடல் என, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட, தி.மு.க.,வினர் திரும்ப திரும்பக் கூறி வருகின்றனர்.


எந்த தமிழருக்கும், தேசிய சிந்தனை வந்துவிடக் கூடாது என்ற கண்ணோட்டத்தில் தான், இப்படி திராவிட மாடல் என, திரும்ப திரும்பச் சொல்றாங்களோ?



தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை:

தமிழகத்தில், மதுவை ஒழிப்பது சம்பந்தமாக, முதல்வர் ஸ்டாலின் உறுதியான கருத்தைக் கொண்டிருக்கிறார். எந்த சீர்திருத்தத்தையும், படிப்படியாகவே கொண்டு வரமுடியும். ஒரே அடியாக அனைத்து சீர்திருத்தங்களையும் புகுத்தினால், நாட்டின் பட்ஜெட் மட்டுமல்ல, அரசாங்க நடைமுறைகளும் சீர்குலையும்.


சோவியத் யூனியனில் சீர்திருத்தம் என்ற பெயரில் முன்னாள் அதிபர் கார்ப்பச்சேவ், எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் அமல்படுத்தினார். அதனால், சோவியத் யூனியன் என்ற அமைப்பே சிதறிப் போனது. தமிழகத்தில் அந்த நிலை வரக்கூடாது என்று தான், முதல்வர் விரும்புகிறார்; நாங்களும் விரும்புகிறோம்.


latest tamil news

'பூரண மதுவிலக்கை கொண்டு வந்தால், தமிழகம் சிதறி விடும்' எனக்கூறும், இவரது அரசியல் அறிவை மியூசியத்தில் தான் வைக்கணும்!



அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:

சென்னை பெருநகர மாநக ராட்சி பகுதிகளில், நகர பஸ்கள் சேவையை பார்ப்பதே அரிதாக இருக்கிறது. இதுவே, ஈடில்லா ஆட்சிக்கு சாட்சியாகவும் அமைந்திருக்கிறது. சாதனை விளம்பரத்தில் கண்ட, புதுப்பித்த பஸ்களும், புதிதாக வாங்கிய பஸ்களும், எங்கே என கேட்கத் தோன்றுகிறது.


பஸ்களை வாங்கிட்டு, ஓட்டுறதுக்கு டிரைவர்கள் கிடைக்கலைன்னு பணிமனைகள்லயே நிறுத்தி வச்சிருக்காங்களோ?



தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:

கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரிக்கு இடம் இல்லாத காரணத்தால், பல்கலை கொடுத்த, 25 புத்தம் புது கணினிகள், பல மாதங்களாக பிரித்துக் கூட பார்க்கப்படாத நிலையில் உள்ளன. பரிசோதனை கூடங்களே இல்லாத நிலையில், பரிசோதனை தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். அரசு கல்லுாரி மாணவர்கள், எந்த அளவுக்கு அலட்சியப்படுத்தப்படுகின்றனர் என்பதையே, இது உணர்த்துகிறது.


அரசு பள்ளிகள் தான், அதிகாரிகளின் அலட்சிய பட்டியலில் இருக்கிறது என்றால், அரசு கல்லுாரிகளின் கதியும் அப்படித்தான் இருக்குது போலும்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

shyamnats - tirunelveli,இந்தியா
12-மே-202308:26:44 IST Report Abuse
shyamnats மத்தியில்தான் கான் கிராஸ் தலைவர்கள் சரியில்லை என்று நினைத்தால், தமிழகத்திலும் ஒருவன் கூட சரியில்லையே? பின் காங்கிரஸ் எப்படி விளங்கும்.? இவர்களை எல்லாம் மக்கள் களையெடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
12-மே-202306:22:52 IST Report Abuse
Kasimani Baskaran 'திராவிடம்' என்ற இல்லாத ஒன்றைப்பிடித்து தீம்கா தொங்கிக்கொண்டு இருக்கிறது. அனைவரையும், எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது என்பதை திராவிட ஓணர்கள் அறிய வேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X