"தேர்தலில் மக்கள் இறுதி முடிவு எடுப்பார்கள்": உத்தவ் தாக்கரே சூளுரை

Updated : மே 12, 2023 | Added : மே 12, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
மும்பை: தேர்தலின் போது மக்கள் இறுதி முடிவு எடுப்பார்கள் என உத்தவ் தாக்கரே நிருபர்கள் சந்திப்பில் பேசுகையில் குறிப்பிட்டார்.மஹாராஷ்டிராவில் நம்பிக்கை ஓட்டெடுப்பை எதிர்கொள்வதற்கு முன்பே, பதவியை ராஜினாமா செய்து விட்டதால், உத்தவ் தாக்கரேயை மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்த முடியாது' என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: தேர்தலின் போது மக்கள் இறுதி முடிவு எடுப்பார்கள் என உத்தவ் தாக்கரே நிருபர்கள் சந்திப்பில் பேசுகையில் குறிப்பிட்டார்.




latest tamil news

மஹாராஷ்டிராவில் நம்பிக்கை ஓட்டெடுப்பை எதிர்கொள்வதற்கு முன்பே, பதவியை ராஜினாமா செய்து விட்டதால், உத்தவ் தாக்கரேயை மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்த முடியாது' என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் நிருபர்கள் சந்திப்பில் இன்று(மே 12) உத்தவ் தாக்கரே கூறியதாவது: நாம் தேர்தலில் சந்திப்போம். இறுதி முடிவை மக்கள் எடுப்பார்கள்.


சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை குறித்து சபாநாயகர் முடிவு செய்யாவிட்டால் மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு செல்வோம். நான் ராஜினாமா செய்தது போல், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்ய வேண்டும். அப்போதைய கவர்னரின் சட்டவிரோத முடிவால் ஷிண்டே ஆதாயம் பெற்றாலும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். சபாநாயகர் இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவுடன் இது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும். உச்சநீதிமன்றம் செல்வோம்; தேர்தலை எதிர்கொள்வோம்.



latest tamil news

உலகம் முழுவதும் மஹாராஷ்டிராவின் பெயர் இழுக்கப்படுகிறது. அதை பிரதமர் மோடி நிறுத்த வேண்டும். உச்சநீதிமன்றத்தின் கருத்தைத் தொடர்ந்து மஹாராஷ்டிரா முன்னாள் கவர்னர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுப்பதன் மூலம் இது போன்ற சட்டவிரோத காரியங்களை எதிர்காலத்தில் யாரும் செய்ய மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

Sivaraman - chennai ,இந்தியா
13-மே-202306:29:13 IST Report Abuse
Sivaraman கூட்டணி வைத்து கூட்டணி தர்மத்தை மீறிய செயலுக்கு ஏற்பட்ட ஒரு விளைவு இது . தன்னையே நொந்துக்கொள்ளவேண்டுமே அன்றி பிறரை எதற்காகப் பேசவேண்டும் .
Rate this:
Cancel
Fastrack - Redmond,இந்தியா
13-மே-202306:02:09 IST Report Abuse
Fastrack பையனுக்கு கலியாணம் பண்ணி வையுங்க ..ராகுல் மாதிரி ஆக வேண்டாம் //
Rate this:
Cancel
13-மே-202305:14:10 IST Report Abuse
ராஜா ஹிந்து மக்கள் பாஜகவுக்கு தான் ஓட்டு போட்டார்கள். இத்தாலிய காங்கிரசுக்கு அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X