உடுமலை;உடுமலை அருகே வெஞ்சமடையில் நிழற்கூரையின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை அமைந்துள்ளது. உடுமலை பழநி ரோட்டில் வெஞ்சமடையில் நிழற்கூரை இருந்தது.
சாலை விரிவாக்கப்பணியின் போது, அங்கிருந்து நிழற்கூரை அகற்றப்பட்டது. பணிகள் முடிந்த பின்பும் அங்கு நிழற்கூரை அமைக்கப்படவில்லை.
இதனால், அந்த பஸ் ஸ்டாப்பிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, அங்கு நிழற்கூரை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.