மாம்பழம் விலை இல்லை மா மரங்கள் வெட்டி அழிப்பு

Updated : மே 13, 2023 | Added : மே 13, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போதிய விலை கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மா விவசாயம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே, மா விவசாயிகள், தோட்டங்களை அழித்து வரும் அவலமும் ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1 லட்சம் ஏக்கரில் மா விவசாயம் செய்யப்பட்டு ஆண்டுக்கு, 2.45 லட்சம் டன் மா உற்பத்தி இருந்தது.பத்து ஆண்டுகள் முன் வரை இந்தியாவிலேயே, தமிழகம்
There is no price for mangoes. Mango trees are cut down and destroyed   மாம்பழம் விலை இல்லை மா மரங்கள் வெட்டி அழிப்பு

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போதிய விலை கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மா விவசாயம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே, மா விவசாயிகள், தோட்டங்களை அழித்து வரும் அவலமும் ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1 லட்சம் ஏக்கரில் மா விவசாயம் செய்யப்பட்டு ஆண்டுக்கு, 2.45 லட்சம் டன் மா உற்பத்தி இருந்தது.

பத்து ஆண்டுகள் முன் வரை இந்தியாவிலேயே, தமிழகம் தான் மா உற்பத்தியில் முதலிடத்தை பெற்று இருந்தது. ஆனால், இன்று மா உற்பத்தியில் தமிழகம், ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'பருவநிலை மாற்றம், பூச்சி தாக்குதல் உள்ளிட்டவற்றால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது.

'விளைச்சல் குறைந்தால் மாங்காய் விலை உயரும். ஆனால் மாங்கூழ் நிறுவனங்கள், தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து மிக குறைந்த விலையை கொடுக்கின்றனர்' என்றனர்.

போச்சம்பள்ளி அடுத்த விருப்பம்பட்டியை சேர்ந்த ரங்கநாதன் கூறுகையில், ''25 ஆண்டுகளாக மா மரங்களை பராமரித்தும், பூச்சி தொல்லையால் மகசூல் இல்லை. உற்பத்தியாகும் மாங்காய்களுக்கு குறைந்த விலை நிர்ணயிப்பதால் செலவு செய்த பணம் கூட கிடைக்கவில்லை.

''இதையடுத்து எனக்கு சொந்தமான, 15 ஏக்கர் மாந்தோட்டத்தில் இருந்த, 1,350 மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளேன்,'' என்றார்.

கே.ஆர்.பி., இடதுபுற கால்வாய் நீட்டிப்பு சங்க தலைவர் சிவகுரு கூறுகையில், ''அரசே மாங்கூழ் தொழிற்சாலையை, கிருஷ்ணகிரியில் அமைக்க வேண்டும். விவசாயிகளை அதில், பங்குதாரர்களாக சேர்க்கலாம்.

''அரசே மாங்கூழ் தொழிற்சாலையை நடத்தினால், ஆயிரக்கணக்கான கோடி லாபத்துடன், ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

CBE CTZN - Coimbatore,இந்தியா
14-மே-202316:38:59 IST Report Abuse
CBE CTZN மாம்பழங்களை மக்கள் வாங்க அச்சப்படுகிறார்கள்... காரணம் அவை செயற்கை முறையில் வியபாரிகளால் பழுக்க வைக்கப்படுவதுதான். மேலும் விலை அதிகம்... எப்படி மக்கள் வாங்குவர்.. எப்படி விவசாயி லாபம் பார்ப்பான்... அனைத்தும் தரகர்கள் கொண்டு வரும் வியாபார இடர்
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
13-மே-202319:00:09 IST Report Abuse
g.s,rajan நமது நாட்டில் நாளுக்கு நாள் விவசாயம் அழிந்து கொண்டு இருக்கிறது,டிஜிட்டல் புரட்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு இருக்கிறது.எது மிகவும் முக்கியம்... ???
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
13-மே-202314:16:08 IST Report Abuse
r.sundaram இங்கு சாதா மாம்பழம் கிலோ நூறு ரூபாய்க்குமேல் விற்கப்படுகிறது. வாங்குவதற்கு ஆட்களுமில்லை, காரணம் இயற்கையான முறையில் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X