முள்ளிப்பள்ளத்தில் கும்பாபிஷேகம்

Added : மே 13, 2023 | |
Advertisement
சோழவந்தான்--சோழவந்தான் முள்ளிப்பள்ளம் திருநாவுக்கரசர் மடத்தில் 122 ஆண்டுகளுக்குப் பின் புனரமைப்பு பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.மே 11ல் புதிய பீடத்தில் விநாயகர், திருநாவுக்கரசர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. சிவாச்சாரியார் சிவபாபு தலைமையில் கணபதி ஹோமத்துடன் 2 கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்து



சோழவந்தான்--சோழவந்தான் முள்ளிப்பள்ளம் திருநாவுக்கரசர் மடத்தில் 122 ஆண்டுகளுக்குப் பின் புனரமைப்பு பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

மே 11ல் புதிய பீடத்தில் விநாயகர், திருநாவுக்கரசர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. சிவாச்சாரியார் சிவபாபு தலைமையில் கணபதி ஹோமத்துடன் 2 கால யாக பூஜை நடந்தது.

தொடர்ந்து கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்து கருவறை விமான கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. விநாயகர், திருநாவுக்கரசருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

மடத்தின் குருபூஜை இன்று (மே 13)ல் சித்திரை மாத சதயநட்சத்திரத்தில் நடைபெறும். திருமால் பிள்ளை வகையறாக்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X