கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே காணாமல் போன கல்லுாரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
கண்டமங்கலம் அடுத்த பள்ளிதென்னல் பூந்தோட்ட வீதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. கூலித்தொழிலாளி.
இவரது மகள் ஆர்த்தி 19; புதுச்சேரி வில்லியனுார் அடுத்த பெரம்பையில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.
இவரை கடந்த 10ம் தேதி அதே ஊரில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பார்த்தசாரதி கொடுத்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.