சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் உயர் நீதிமன்ற நீதிபதி வேலுமணி சுவாமி தரிசனம் செய்தார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேலுமணி நேற்று காலை வருகை தந்தார். அவரை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் மரியாதை செய்து, கோவிலுக்குள் அழைத்து சென்றனர்.
அதைத் தொடர்ந்து நீதிபதி வேலுமணி, நடராஜர், சிவகாம சுந்தரியை தரிசனம் செய்தார். நடராஜர் கோவில் தீட்சிதர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். சிதம்பரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.