5 ஆண்டு சட்ட படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்

Updated : மே 15, 2023 | Added : மே 14, 2023 | |
Advertisement
சென்னை: சட்ட பல்கலையில் ஐந்தாண்டு சட்ட படிப்புக்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அம்பேத்கர்சட்ட பல்கலையின் இணைப்பில், 15 அரசு கல்லுாரிகள், ஒன்பதுதனியார் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவை தவிர, பல்கலையின் நேரடி கட்டுப்பாட்டில்,சீர்மிகு சட்ட கல்லுாரியும் செயல்படுகிறது.இந்த கல்லுாரிகளில், பி.ஏ., ---- எல்.எல்.பி.,ஐந்தாண்டு படிப்பு
Application for 5 year law course from today   5 ஆண்டு சட்ட படிப்புக்கு  இன்று முதல் விண்ணப்பம்



சென்னை: சட்ட பல்கலையில் ஐந்தாண்டு சட்ட படிப்புக்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அம்பேத்கர்சட்ட பல்கலையின் இணைப்பில், 15 அரசு கல்லுாரிகள், ஒன்பதுதனியார் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவை தவிர, பல்கலையின் நேரடி கட்டுப்பாட்டில்,சீர்மிகு சட்ட கல்லுாரியும் செயல்படுகிறது.

இந்த கல்லுாரிகளில், பி.ஏ., ---- எல்.எல்.பி.,ஐந்தாண்டு படிப்பு நடத்தப்படுகிறது. சீர்மிகு சட்ட கல்லுாரியில், எல்.எல்.பி.,யுடன் இணைந்த பி.ஏ., - பி.பி.ஏ., - பி.காம்.,மற்றும் பி.சி.ஏ., ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது; வரும் 31ம் தேதி வரைவிண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2வில், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர், குறைந்தபட்சம், 40 சதவீதம், மற்றவர்கள், 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விபரங்களை, www.tndalu.ac.in/ என்றஇணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X