கிணத்துக்கடவு:கண்ணமநாயக்கனுாரை சேர்ந்தவர் விகாஸ், 17, தனியார் பொறியியல் கல்லுாரியில், படித்து வந்தார். இவர், கடந்த 12ம் தேதி காலை இருசக்கர வாகனத்தில் சொக்கனுார் - மதுக்கரை ரோட்டில் செல்லும் போது, எதிரே வந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
படுகாயமடைந்த விகாஸ், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.