22 நாளாக குழாயில் 'காற்று'

Added : மே 15, 2023 | |
Advertisement
கிடைக்காத குடிநீர்திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிக்கு, 22 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்படுகிறது. நகராட்சியாகியும், நிலை மாறவில்லை. குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.- செல்வி, திருமுருகன்பூண்டி.எரியாத விளக்குதிருப்பூர், தாராபுரம் ரோடு, கோவில்வழியில் இருந்து வீரபாண்டி செல்லும் ரோடு, வசந்தம் நகரில் தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்கை மாற்ற
Air in the pipe for 22 days   22 நாளாக குழாயில் 'காற்று'

கிடைக்காத குடிநீர்

திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிக்கு, 22 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்படுகிறது. நகராட்சியாகியும், நிலை மாறவில்லை. குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.

- செல்வி, திருமுருகன்பூண்டி.

எரியாத விளக்கு

திருப்பூர், தாராபுரம் ரோடு, கோவில்வழியில் இருந்து வீரபாண்டி செல்லும் ரோடு, வசந்தம் நகரில் தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்கை மாற்ற வேண்டும்.

- செல்வராஜ், வசந்தம்நகர்.

அகலாத செடி

திருப்பூர், குமரன் ரோடு - முனிசிபல் ஆபீஸ் வீதி சந்திப்பு பாலத்தில் செடி வளர துவங்கி விட்டது. மரமாக மாறி கட்டடம் விரிசல் அடையும் முன் அகற்றிட வேண்டும்.

- வின்சென்ட்ராஜ், ராயபுரம்.

உடைந்த குழாய்

திருப்பூர், 15 வேலம்பாளையம், டி.டி.பி., மில் கார்னர், ஸ்ரீபதி நகரில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- சுதர்சன் பெரியசாமி, ஸ்ரீபதிநகர்.

அபாய மின்கம்பம்

அவிநாசி, கருவலுார், ராமநாதபுரம் ஊராட்சி, கிருஷ்ணாபுரத்தில் அடிபாகம் முழுமையாக சேதமடைந்து, மின்கம்பம் விழும் நிலையில் உள்ளது. மின்விபத்து ஏற்படும் முன் மாற்ற வேண்டும்.

- பிரித்வி, கிருஷ்ணாபுரம்.

திருப்பூர், தென்னம்பாளையம், நாவிதன் தோட்டம் முதல் வீதியில், சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழும் நிலையில் மின்கம்பம் உள்ளது. மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.

- மாலதி, நாவிதன் தோட்டம்.

பழுதான சாலை

தாராபுரம், அமராவதி ஆற்று பாலத்தில், சாலை சேதமாகி, குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். 'பேட்ஜ்ஒர்க்' மேற்கொள்ள வேண்டும்.

- ராசாமணி, தாராபுரம்.

பதறும் மக்கள்

திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, எம்.எஸ்., நகர் தனியார் வங்கி ஏ.டி.எம்., உள்ளே நாய் உறங்குவதால், பணம் எடுக்க செல்வோர் பதட்டம் அடைகின்றனர்.

- ரஞ்சித்குமார், எம்.எஸ்., நகர்.

வீணாகும் மின்சாரம்

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு, முருகப்ப செட்டியார் ஸ்கூல் வீதியில் பகலிலும் தெருவிளக்கு எரிந்து மின்சாரம் வீணாகிறது. விளக்குகளை அணைத்து மின்சாரத்தை சேமிக்க வேண்டும்.

- சந்தோஷ்குமார், பாளையக்காடு.

விரயமாகும் தண்ணீர்

திருப்பூர், 23வது வார்டு, ஆர்.எஸ்., புரம் மெயின் வீதியில் அவ்வப்போது டேங்க் நிரம்பி தண்ணீர் வீணாக வழிந்தோடுகிறது. சரியான நேரத்துக்கு மோட்டார் இயக்கத்தை நிறுத்தி, தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

- ராஜேஷ்குமார், ஆர்.எஸ்., புரம்.

கிடைக்காத குடிநீர்

திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிக்கு, 22 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்படுகிறது. நகராட்சியாகியும், நிலை மாறவில்லை. குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.

- செல்வி, திருமுருகன்பூண்டி.

எரியாத விளக்கு

திருப்பூர், தாராபுரம் ரோடு, கோவில்வழியில் இருந்து வீரபாண்டி செல்லும் ரோடு, வசந்தம் நகரில் தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்கை மாற்ற வேண்டும்.

-செல்வராஜ், வசந்தம்நகர்.

அகலாத செடி

திருப்பூர், குமரன் ரோடு - முனிசிபல் ஆபீஸ் வீதி சந்திப்பு பாலத்தில் செடி வளர துவங்கி விட்டது. மரமாகி மாறி கட்டுமானம் விரிசல் அடையும் முன் அகற்றிட வேண்டும்.

- வின்சென்ட்ராஜ், ராயபுரம். (படம் உண்டு)

உடைந்த குழாய்

திருப்பூர், 15 வேலம்பாளையம், டி.டி.பி., மில் கார்னர், ஸ்ரீபதி நகரில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- சுதர்சன் பெரியசாமி, ஸ்ரீபதிநகர். (படம் உண்டு)

அபாய மின்கம்பம்

அவிநாசி, கருவலுார், ராமநாதபுரம் ஊராட்சி, கிருஷ்ணாபுரத்தில் அடிபாகம் முழுமையாக சேதமடைந்து, மின்கம்பம் விழும் நிலையில் உள்ளது. மின்விபத்து ஏற்படும் முன் மாற்ற வேண்டும்.

- பிரித்வி, கிருஷ்ணாபுரம். (படம் உண்டு)

திருப்பூர், தென்னம்பாளையம், நாவிதன் தோட்டம் முதல் வீதியில், சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழும் நிலையில் மின்கம்பம் உள்ளது. மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.

- மாலதி, நாவிதன் தோட்டம். (படம் உண்டு)

பழுதான சாலை

தாராபுரம், அமராவதி ஆற்று பாலத்தில், சாலை சேதமாகி, குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். 'பேட்ஜ்ஒர்க்' மேற்கொள்ள வேண்டும்.

- ராசாமணி, தாராபுரம். (படம் உண்டு)

பதறும் மக்கள்

திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, எம்.எஸ்., நகர் தனியார் வங்கி ஏ.டி.எம்., உள்ளே நாய் உறங்குவதால், பணம் எடுக்க செல்வோர் பதட்டம் அடைகின்றனர்.

- ரஞ்சித்குமார், எம்.எஸ்., நகர். (படம் உண்டு)

வீணாகும் மின்சாரம்

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு, முருகப்ப செட்டியார் ஸ்கூல் வீதியில் பகலிலும் தெருவிளக்கு எரிந்து மின்சாரம் வீணாகிறது. விளக்குகளை அணைத்து மின்சாரத்தை சேமிக்க வேண்டும்.

- சந்தோஷ்குமார், பாளையக்காடு. (படம் உண்டு)

விரயமாகும் தண்ணீர்

திருப்பூர், 23வது வார்டு, ஆர்.எஸ்., புரம் மெயின் வீதியில் அவ்வப்போது டேங்க் நிரம்பி தண்ணீர் வீணாக வழிந்தோடுகிறது. சரியான நேரத்துக்கு மோட்டார் இயக்கத்தை நிறுத்தி, தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

- ராஜேஷ்குமார், ஆர்.எஸ்., புரம். (படம் உண்டு)

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X