நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் தொகுதியில் வீடு கட்டும் பயனாளிகளுக்கு தவனைத் தொகையினை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.
ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு தவனை தொகை வழங்கும் நிகழ்ச்சி கரியமாணிக்கத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு கல்வீடு கட்டும் 44 பயனாளிகளுக்கு மூன்றாம் தவனை தொகையாக ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 44 லட்சம் வழங்கினார்.
நிகழ்சியில் நல ஆய்வாளர் ஏழுமலை, என்.ஆர்.,காங்., பிரமுகர் பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.