சென்னிமலை: சென்னிமலை காமாட்சியம்மன் கோவிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு, 610 குடம் பாலாபிஷேகம் நடந்தது.
சென்னிமலையில் காமாட்சி அம்மன் கோவில் பொங்கல் விழா வரும், 18ம் தேதி நடக்கிறது.
இதையொட்டி நேற்று காலை, ௬1௦ பால் குடங்களுக்கு, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, நான்கு ரத வீதிகளில் மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று, பக்தர்கள் கோவிலை அடைந்தனர்.
இதில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் பால் குடங்களை சுமந்து வந்தனர். பால் குடங்களை சுமந்து சென்றனர். இதை தொடர்ந்து காமாட்சியம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. நாளை மாலை கும்பம் பாலித்தல்; 17ல் காமட்சியம்மன் மாவிளக்குக்குடன் திருவீதிகளில் பவனி வந்து தீபாராதனை நடக்கிறது.
18ம் தேதி காலை, 6:00 மணிக்கு பொங்கல் வைபவம் நடக்கிறது. அன்று மதியம், 3:00 மணிக்கு மேலப்பாளையம் மாதேஸ்வர நகரிலிருந்து, அலகு தேர் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை அடையும். மாலை, 4:00 மணிக்கு களத்துக்காட்டில் இருந்து மாவிளக்கு ஊர்வலம் புறப்பட்டு ஜென்டை மேளம் முழங்க கோவிலை வந்தடையும். 19-ம் தேதி இரவு மஞ்சள் நீராட்டம், மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.