ஈரோடு: தமிழ்நாடு சதுரங்க கழகம், ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கிள் சார்பில், மாநில அளவில் ஒன்பது வயது சிறுவர்-சிறுமிக்கான செஸ் போட்டி, ஈரோட்டில் கொங்கு கல்வி நிலையத்தில் கடந்த, 10-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது.
இதில், 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நேற்று மாலை பரிசளிப்பு விழா நடந்தது. மாணவர் பிரிவில் விருதுநகர் மாவட்டம் அக் ஷயா விக்னேஷ் முதலிடம், சென்னையை சேர்ந்த ஸ்ரேயாஸ் மணி இரண்டாமிடம் பெற்றனர்.
மாணவியர் பிரிவில் சென்னை பூஜாஸ்ரீ முதலிடம், கன்னியாகுமரி பெசிலிகா பியான்ஸ் இரண்டாமிடம் பிடித்தனர். இவர்கள் அகில இந்திய செஸ் போட்டியில், தமிழக அணி சார்பில் விளையாட தகுதி பெற்றனர்.