விருத்தாசலம் : விருத்தாசலத்தில் பொது மக்களை ஆபாசமாக திட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் நேற்று ரயில்வே ஜங்ஷன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தாஷ்கண்ட் நகரைச் சேர்ந்த சவுந்தர ராஜன் மகன் மணிகண்டன், 21; என்பவர் பொது இடத்தில் நின்றுகொண்டு, பொதுமக்களை அசிங்கமாக திட்டி, போக்குவரத்திற்கு இடையூறு செய்தார்.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனர்.