நடுவானில் குலுங்கிய விமானம்: பயணிகள் 'அலறல்'; 7 பேருக்கு லேசான காயம்
நடுவானில் குலுங்கிய விமானம்: பயணிகள் 'அலறல்'; 7 பேருக்கு லேசான காயம்

நடுவானில் குலுங்கிய விமானம்: பயணிகள் 'அலறல்'; 7 பேருக்கு லேசான காயம்

Updated : மே 17, 2023 | Added : மே 17, 2023 | கருத்துகள் (13) | |
Advertisement
புதுடில்லி: புதுடில்லியில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு சென்ற, ஏர் இந்தியா விமானம் நடுவானில், காற்றழுத்த மாறுபாடு காரணமாக குலுங்கியதில், பயணிகள் அலறி சத்தம் போட்டனர். 7 பேர் லேசான காயமடைந்தனர்.டில்லியிலிருந்து ஏர் இந்தியாவின் ஏஐ-302 எண் உடைய விமானம் இன்று(மே 17) ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகருக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் செல்லும் வழியில், ஏற்பட்ட காற்றழுத்த

புதுடில்லி: புதுடில்லியில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு சென்ற, ஏர் இந்தியா விமானம் நடுவானில், காற்றழுத்த மாறுபாடு காரணமாக குலுங்கியதில், பயணிகள் அலறி சத்தம் போட்டனர். 7 பேர் லேசான காயமடைந்தனர்.



latest tamil news

டில்லியிலிருந்து ஏர் இந்தியாவின் ஏஐ-302 எண் உடைய விமானம் இன்று(மே 17) ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகருக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் செல்லும் வழியில், ஏற்பட்ட காற்றழுத்த மாறுபாடு காரணமாக, விமானம் சிறிது நேரம் குலுங்கியது. இதில் 7 பயணிகளுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக விமானத்தில் பயணித்த மருத்துவர்களின் உதவியுடன் காயமடைந்தவர்களுக்கு விமான பணியாளர்கள் சிகிச்சை அளித்தனர்.


தொடர்ந்து, சிட்னி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியவுடன் 3 பேருக்கு மட்டும் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. அவர்களுக்கு விமான நிலைய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிரச்னை சிறிது நேரத்தில் சரியானதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகளின் உயிருக்கு எந்த சேதமும் இல்லை.



latest tamil news


சமீபத்தில் நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை திடீரென நடுவானில் வைத்து தேள் ஒன்று கொட்டியது. இதில் அவர் வலியால் துடித்தார். இதன் பின்னர், விமானம் தரையிறங்கியதும் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (13)

R.SANKARA RAMAN - chennai,இந்தியா
18-மே-202305:57:39 IST Report Abuse
R.SANKARA RAMAN அண்மையில் அட்லாண்டாவிலிருந்து தோஹா வந்தபோது இத்தகைய நிகழ்ச்சி நடந்தது. பைலட் எச்சரித்ததும் "டின்னர்" வழங்கிக்கொண்டிருந்த பணிப்பெண்கள் அலறி அடித்து அவர்கள் அறைக்கு ஓடினர். நின்று கொண்டிருந்த பயணிகள் அப்படியே தரையில் அமர்ந்தனர். வழக்கமாக இது இரண்டு/மூன்று நிமிடங்கள் இருக்கும். ஆனால் அன்று பதினைந்து நிமிடங்கள் நீடித்தது. மறக்க முடியாத நிகழ்வு.
Rate this:
Cancel
17-மே-202322:49:46 IST Report Abuse
மு.செந்தமிழன் செய்தியின் ஆரம்பத்தில் காற்றழுத்த மாறுபாடு தான் காரணம்னு சொன்னீங்க செய்தியின் கடைசியில தொழில் நுட்ப கோளாருனு சொல்றீங்க எது உண்மை
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
17-மே-202322:05:07 IST Report Abuse
Duruvesan Boss, ஏர் turbulance belt sign vanthhaa எவனும் போடறது இல்ல, just அவங்க சொல்லும் போது ஷோ மட்டும் காட்டுவாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X