பெண்களுக்கு மாதம் ரூ.1300 வட்டி வழங்கும் தபால் நிலைய சேமிப்பு: வரியும் கிடையாது
பெண்களுக்கு மாதம் ரூ.1300 வட்டி வழங்கும் தபால் நிலைய சேமிப்பு: வரியும் கிடையாது

பெண்களுக்கு மாதம் ரூ.1300 வட்டி வழங்கும் தபால் நிலைய சேமிப்பு: வரியும் கிடையாது

Updated : மே 17, 2023 | Added : மே 17, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
மத்திய பட்ஜெட்டில் மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் என்பது பெண்களுக்காக அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் வட்டிக்கு, வரி பிடித்தம் கிடையாது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியமும் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.எந்த ஒரு பெண்ணும் தபால் நிலையத்தில் மகிளா சம்மான் கணக்கைத் தொடங்கலாம். அதே போல் பெண் குழந்தையின் பேரிலும்
Post Office Savings for Women Rs.1300 interest per month: Tax free  பெண்களுக்கு மாதம் ரூ.1300 வட்டி வழங்கும் தபால் நிலைய சேமிப்பு: வரியும் கிடையாது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மத்திய பட்ஜெட்டில் மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் என்பது பெண்களுக்காக அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் வட்டிக்கு, வரி பிடித்தம் கிடையாது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியமும் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எந்த ஒரு பெண்ணும் தபால் நிலையத்தில் மகிளா சம்மான் கணக்கைத் தொடங்கலாம். அதே போல் பெண் குழந்தையின் பேரிலும் இந்த சேமிப்புப் பத்திரத்தில் பணம் போடலாம். மார்ச் 31, 2025 வரை தான் இத்திட்டம் அமலில் இருக்கும். அந்த தேதிக்குள் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து, அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை இதில் சேமிக்கலாம். அதற்கு ஆண்டு வட்டி விகிதம் 7.5% ஆகும். அதன் படி அதிகபட்சம் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்தால் ஓர் ஆண்டுக்கு ரூ.16 ஆயிரமும், 2 ஆண்டுகளில் ரூ.32 ஆயிரமும் வட்டி கிடைக்கும். மாதக் கணக்கில் பார்த்தால் ரூ.1,300 கிடைக்கிறது.


latest tamil news


மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் மூலம் பெறும் வட்டிக்கு டிடிஎஸ் எனும் வரிப் பிடித்தம் கிடையாது என நிதி அமைச்சகம் தற்போது கூறியுள்ளது. ஒரு நிதியாண்டில் பெறும் வட்டி ரூ.40 ஆயிரத்திற்கும் குறைவாக இருப்பதால் டிடிஎஸ் பொருந்தாது. அதே சமயம் அவர்களின் வருமானத்தில் இத்தொகை சேர்க்கப்பட்டு, நடைமுறையில் உள்ள வருமான வரி ஸ்லாபிற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும். ஆனால் அது ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு தான் என்பதால் கவலை இல்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (3)

Muraleedharan.M - Chennai,இந்தியா
08-ஜூன்-202308:06:54 IST Report Abuse
Muraleedharan.M டோக்கன் முறை சரி alla
Rate this:
Cancel
Muraleedharan.M - Chennai,இந்தியா
08-ஜூன்-202308:05:32 IST Report Abuse
Muraleedharan.M டோக்கன் முறை சரி அல்ல. அவர் அவர் டோகேன்
Rate this:
Cancel
enna ezhavu model? - bangalore,இந்தியா
18-மே-202308:31:40 IST Report Abuse
enna ezhavu model? ஆனால் போஸ்டல் எனப்படும் திமிர் பிடித்த நிர்வாகம் 10 முதல் 2 வரை தான் வேலை செய்கின்றனர் , அங்கே போக வேண்டும் என்றால் ஒரு நாள் லீவ் போட வேண்டும் , கஸ்டமர் ப்ரேன்ட்லி ஆகும் வரை அந்த நிருவாகம் செஞ் ஆகாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X