சென்னை, சென்னையில் உள்ள, அனைத்து வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் சார்பில், நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.
கிண்டி, ஆலந்துார் சாலையில், ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நாளை காலை 10:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை, முகாம் நடக்க உள்ளது.
முகாமில், எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமா, கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில், ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற அனைவரும் பங்கேற்கலாம்.
முகாமில், 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. வேலை தேடுவோரும், வேலை அளிப்போரும், தங்கள் விபரங்களை தனியார் துறை வேலை வாய்ப்பு இணையதளத்தில், www.tnprivatejobs.tn.gov.in பதிவேற்றம் செய்ய வேண்டும்.
'வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.