விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் கல்லுாரிகளில் சேர விரும்புவோர் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு: இந்த கல்வி ஆண்டிற்கு முன்னாள் படைவீரர்களைச் சார்ந்தோர்களுக்கு மருத்துவம், பொறியியல், டி.பார்ம், பி.பார்ம், பாலிடெக்னிக்கில் பட்டயப்படிப்புகள், பி.எஸ்சி (நர்சிங்), பி.எஸ்.சி (விவசாயம்), பி.எட்., மருத்துவம், பி.வி.எஸ்.சி., பி.எப்.எஸ்.சி., ஆசிரியர் பயிற்சி, பட்டயப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் போன்ற பல்வேறு படிப்புகளில் அரசால் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இவ்விட ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க முன்னாள் படைவீரரைச் சார்ந்தோர்கள், மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சார்ந்தோர் சான்று பெறவேண்டும் இணையதளம் மூலம் முன்னாள் படைவீரரின் அசல் படைவிலகுச் சான்று, அடையாள அட்டை சார்ந்தோர்களின் பள்ளி இறுதிச் சான்று.
மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்று கல்வி நிலையத்தில் பெறப்பட்ட விண்ணப்பம், ஓய்வூதியம் ஒப்பளிப்பு ஆணை மற்றும் முன்னாள் படைவீரர் விண்ணப்பம் ஆகியவற்றுடன், மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக exwelvpm@tn.gov.in. மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பித்து சான்று பெற்று பயன்பெறலாம்.
சான்று பதிவேற்றம் குறித்து சந்தேகம் இருப்பின், உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், விழுப்புரம், தொலைபேசி எண்: 04146-220524-ல் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.