தி.மு.க., பொதுக்கூட்டம்

Added : மே 21, 2023 | |
Advertisement
கூடுவாஞ்சேரி: காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகர தி.மு.க., இளைஞரணி சார்பில், தி.மு.க., அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரம் காலனியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.இதில் நகர இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார், மாணவரணி அமைப்பாளர் தினேஷ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். தொடர்ந்து,
DMK, General Assembly   தி.மு.க., பொதுக்கூட்டம்



கூடுவாஞ்சேரி: காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகர தி.மு.க., இளைஞரணி சார்பில், தி.மு.க., அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரம் காலனியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

இதில் நகர இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார், மாணவரணி அமைப்பாளர் தினேஷ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

தொடர்ந்து, நகர இளைஞரணி மற்றும் மாணவரணி துணை அமைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக் அனைவரையும் வரவேற்று பேசினார்.

மேலும், தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் எம்.பி., செல்வம், நந்திவரம் - -கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் கார்த்திக் ஆகியோர் பங்கேற்று, தி.மு.க.,வின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி பேசினர்.

அதை தொடர்ந்து, 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X